பள்ளிபாளையம், மே 20- பள்ளிபாளையம் அருகே மூதாட்டி களை பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமான முறையில் படுகொலை செய்த இளைஞரை காவல் துறை யினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி, கடந்த மார்ச் மாதம் பாப்பபாளையம் கரும்புகாட்டில் கால் நடைகள் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். மேலும், அவர் அணிந் திருந்த 12 சவரன் தங்க நகை கொள்ளை போனது. இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்த நிலையில், கடந்த மே 12 ஆம் தேதியன்று பள்ளிபாளையம் பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த 62 வயது மூதாட்டி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தலையில் கல்லால் தாக்கி கொலை செய்ததுடன், அவர் அணிந்திருந்த தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. இரு கொலைகளும் ஒரே மாதிரியாக இருந்த தால் மாவட்ட காவல்துறை கூடுதல் கண் காணிப்பாளர் ராஜூ தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்ற வாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சனியன்று அதி காலை பள்ளிபாளையம், எஸ்பிபி காலனி பகுதியில், சந்தேகத்திற்கு இட மாக நின்று கொண்டிருந்த இளை ஞரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற் கொண்டனர். இதில், அவரது பெயர் செல்வம் என்பதும், பள்ளிபாளையத் தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந் தது. மேலும், இரு மூதாட்டிகளையும் பாலியல் வன்கொடுமை செய்து நகைக் காக கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து பள்ளிபாளையம் போலீசார் அவரை கைது செய்து குமார பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, 15 நாள் நீதிமன்ற காவ லில் அடைத்தனர்.