districts

img

க்யூஆர் குறியீடு மூலம் பயணச்சீட்டு எடுக்கலாம்!

சேலம், ஆக.20- சேலம் ரயில்வே கோட்டத்தில், பயணச் சீட்டுகளுக்கு பணம் செலுத்த புதிய நடை முறை அமலுக்கு வந்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிக ளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது. அதன்ஒருபகுதியாக தற்போது ரயில்வே நிர்வாகம் சார்பில், கியூஆர் குறி யீடு மூலம் பயணச்சீட்டுக்கான பணம் செலுத் தும் முறையை அறிமுகம் செய்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், தருமபுரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 78 ரயில் நிலையங்களில் உள்ள அனைத்து முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு, நடைமேடை பயணச்சீட்டு பெற கியூஆர் குறியீடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தால் பயணிகள் சிரமமின்றி முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லா பய ணச்சீட்டை எளிதில் பெற முடியும். நீண்ட நேரம் வரிசையில் நின்று பயணச்சீட்டு பெற வேண்டிய அவசியம் இல்லை என பயணி கள் தெரிவித்துள்ளனர்.