சேலம், மே 24- ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்லும் பய ணிகளின் வசதிக்காக சுற்றுலாத் துறையின் ஏற்பாட்டில் “ஏற்காடு சூழலியல் சுற்றுலா” என் னும் சொகுசு வாகனச் சேவை தொடங்கப் பட்டு உள்ளது. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படு கிற ஏற்காடு கோடை விழாவை அனுபவிப்ப தற்கு ஏதுவாக, ஏற்கடு சூழலியல் சுற்றுலா வாகன சேவை துவங்கப்பட்டுள்ளது. நாள் தோறும் காலை 9 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுற்றுலா வாக னம் புறப்பட்டு, சேலம் ரயில் நிலையம், 5 ரோடு, அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாக ஏற்காடு சென்றடைய உள்ளது. ஏற்காடு ஏரி, சேர்வராயன் காட்சிமுனை, இந்திய தாவரவியல் ஆய்வகம், பீக்கு பூங்கா, பக்கோடா பாய்ண்ட், லேடீஸ் சீட், பட்டுப்புழு வளர்ப்புத்துறை, ரோஜா தோட் டம் மற்றும் அண்ணா பூங்கா ஆகிய சுற்று லாப் பகுதிகளுக்கு நுழைவுக் கட்டணத்து டன், பயணிகளுக்கு கட்டணமாக (குளிர் சாதன வசதி யில்லாமல்) ரூ.860, (காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலையில் தேநீர் மற்றும் தின்பண்டங்கள்) உட்பட, குளிர்சாதன வசதியுடன் ரூ.960 நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைக ளுக்கு எவ்வித பயணக் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். மேலும், அன் றைய தினம் மாலை 6 மணியளவில் ஏற்காட்டி லிருந்து புறப்பட்டு, சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தடையும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.