சேலம், மே 29- ஏற்காடு கோடை விழாவை ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். ஏற்காடு 46ஆவது கோடைவிழா மலர் கண்காட்சி நிறைவு பெற்றது. இந்த நிறைவு விழாவில் ஆட்சியர் கார்மேகம் பங்கேற்று, கோடை விழா சிறப்பாக நடைபெற உழைத் திட்ட அரசு ஊழியர்களுக்கு நன்றி தெரி வித்தும், கோடை விழா பொறுப்பு அதிகாரி களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். கடந்த எட்டு நாட்களும் கோடைவிழா மலர் கண்காட்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சி கள் விளையாட்டு போட்டிகள் நடத்தப் பட்டது. சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் மலர்கள் காட்சியை கண்டு ரசித்தனர். மலர் கண்காட்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து பணியாற்றிய ஊரக வளர்ச்சித்துறை வருவாய்த் துறை ஊழியர் களுக்கும் குறிப்பாக தூய்மை பணியாளர் கள் மின்சார துறை ஊழியர்கள் இரவு, பகல் பாரமல் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். எட்டு நாட்களாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் வீட்டு தோட்டம் அமைத்தல், மலர் கண்காட்சி திடலில் சுற்றுலா பயணிகளை கவரும் வித மாக காய்கறி சாக்லேட் கொண்டு சிறப்பு உரு வங்களை அமைத்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்.