districts

img

ஏற்காடு கோடை விழா நிறைவு

சேலம், ஜூன் 1- 8 நாள் கொண்டாட்டத்திற்கு பின் ஏற்காடு கோடை விழா புதனன்று நிறைவடைந்தது.  ஏற்காட்டில் 45 ஆவது  கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடர்ச்சியாக 8 நாட்கள் நடத்தப்பட்டது. முதல் நாளான கடந்த  25 ஆம் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கி யது. கோடை விழாவின் 7 ஆவது நாளான செவ்வாயன்று ஏற்காடு படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்க ளுக்கு பெடல் படகு போட்டியும், பட கோட்டிகளுக்கு துடுப்பு படகு போட்டியும் நடத்தப்பட்டது. போட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப் போட்டியை நாமக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண் கள் மற்றும் தம்பதிகளுக்கு என தனித்தனி யாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி யில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலா அலுவலர் சக்திவேல் மற்றும் ஏற்காடு படகு இல்ல மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.  

இதைத்தொடர்ந்து 8 ஆவது நாளான புத னன்று கோடை விழா மற்றும் மலர் கண் காட்சி  பல்வேறு நிகழ்ச்சிகளுடன்  நிறைவ டைந்தது. விளையாட்டு துறை சார்பாக இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி, கலை நிகழ்ச்சி, பிற்பகலில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம் போன்றவை நடை பெற்றது. விழா நிறைவு நாளில் ஏராள மான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந் தனர். சேலம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நா டகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநி லங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து மலர் கண் காட்சி, பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி  ஆகியவற்றை ஆர்வத்துடன் கண்டு ரசித்த னர். இதேபோல் ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட்,  பக்கோடா பாயின்ட் ஆகிய இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந் தது. கோடை விழா- மலர் கண்காட்சியில் தமிழ்நாடு அரசு துறைகள் சார்பில் பல் வேறு கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப் பட்டு இருந்தன. இதில் சிறந்த கண்காட்சி  அரங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த அரங்கங்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சி யர் கார்மேகம் சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் அரங்கங்களை சிறப்பாக அமைத்த துறை அலுவலர்களையும் பாராட்டினார்.