districts

img

ஏற்காடு: சாலையோர வியாபாரிகள் போராட்டம்

சேலம், மார்ச் 24- ஏற்காட்டில் சாலையோரம் இருந்த கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கக் கோரி 100க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சாலை ஓரத்தில் வியாபாரிகள் நூற்றுக் கணக்கான கடைகள் வைத்து நடத்தி வந்தனர். இந்நிலையில், நெடுஞ்சா லைத்துறையினர் கடைகளை அப்பு றப்படுத்தி, மாற்று இடம் ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலை யில், மாற்று இடம் அமைத்து தரக் கோரி சாலையோர வியாபாரிகள் ஒண்டிக்கட்டை அண்ணா சலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும். கணவனை இழந்த வர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தமிழக அரசு நிவா ரணம் வழங்க வேண்டும். சாலையோ ரம்  தள்ளுவண்டி கடைகளை வைக்க  நிதியுதவி அளிக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி னர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்காடு ஒன் றியச் செயலாளர் நேரு தலைமையில், நூற்றுக்கணக்கான சாலையோர வியாபாரிகள் பேரணியாகச் சென்று நெடுஞ்சாலைத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்த னர். அம்மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், இதுசம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் எடுத்து கூறி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.