உடுமலை, பிப்.5- ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக் கோட்டத்தில் உலக ஈரநில நாள் விழா கொண்டாடப்பட்டது. திருப்பூர் வனக் கோட்டத்தில் உலக ஈரநில நாள் விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப் பூர் வனக்கோட்டம் துணை இயக்குநர் அவர்கள் தலைமை வகித்தார். ஆர்.ஜி.எம் பள்ளி மற்றும் உடுமலைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மற் றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் ரவீந்திரன் காமாட்சி (நேச்சர் சொசைட்டி ஆஃப் திருப்பூர்), பறவை கள் குறித்தும், ஈர நிலங்கள் குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், இந்நிகழ்ச்சியையொட்டி ஆன்லைன் மூலமாக ஈரநிலங்கள் தொடர்பான புகைப்பட போட்டிகள் நடத்தப் பட்டது. இப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றி தழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சி யில் திருப்பூர் வனக் கோட்ட உதவி வனப் பாதுகாவலர், உதவி இயக்குநர், வனச்சரக அலுவலர்கள், வனவர்கள். வனக் காப்பாளர்கள் மற்றும் வனத்துறை சார்ந்த பணியா ளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.