திருப்பூர், மே 12 - உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, வெள்ளியன்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் வெள்ளியன்று ஆரம்ப சுகாதார நிலை யங்களில் நேரில் சென்று செவிலியர்களுக்கு வாழ்த்து மடல் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், மாணவர்கள் செவிலியர்களை நேரில் சந்தித்து செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித் தனர். மாணவ செயலர்கள் ராஜபிரபு, பூபதி ராஜா, விஜய் ஆகி யோர் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.