கோவை, ஏப்.7- சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் விளை யாட்டு மைதானத்தை போல, கோவையில் அதிநவீன வசதியுடன் விளையாட்டு மைதா னம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் எக்ஸ் தள பதிவுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். கோவையில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைக் கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நன்றி தெரி வித்துள்ளார். கோவை மக்களவை தொகுதிக்கு பொறுப் பாக திமுக சார்பில் தொழில்துறை அமைச் சர் டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கோவையில் முகாமிட்டு தேர்தல் பணி களை செய்து வருகிறார். இந்நிலையில் ஞாயி றன்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் தளத் தில் முதல்வருக்கு ஒரு கோரிக்கை விடுத்து இருந்ததார். அதில், கோவையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பல்வேறு இளைஞர்களை சந் தித்தபோது அவர்களுக்கு விளையாட்டின் மீது பெரும் ஆர்வத்தை காணமுடிந்தது. தடக ளம் உட்பட பல்வேறு விளையாட்டுகளில் கோவை இளைஞர்கள் ஆர்வம் செலுத்தி வரு வதை பார்க்க முடிந்தது. குறிப்பாக கிரிக்கெட் மீது இளைஞர்களின் மோகம் அதிகம் இருந் ததை காணமுடிந்ததாகவும், மேற்கு மண்ட லத்தில் அதிக அளவில் தேசிய அளவில் விளையாடிய வீரர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்து இருந்த அவர். அவர்களுக்கான உலகத்தரம் வாய்ந்த பல்வேறு அம்சங்களு டன் கூடிய ஒரு கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்வ தாக குறிப்பிட்டிருந்தார். டி.ஆர்.பி ராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த இரண்டு மணி நேரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கு பதில் அளித் துள்ளார். அதில், விளையாட்டு மற்றும் கிரிக் கெட் ஆர்வலர் என்ற முறையில், 2024 தேர்த லுக்கான எங்கள் தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியைச் சேர்க்க விரும் புகிறேன் எனவும், கோவையிலுள்ள விளை யாட்டு ஆர்வலர்களின் தீவிர பங்கேற்புடன், அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி எடுப்போம் எனவும் தெரிவித்துள் ளார். பி.ஆர்.நடராஜன் நன்றி தமிழக முதல்வரின் அறிவிப்பிற்கு மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் வரவேற்பை தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதா வது, கோவை மாவட்டத்தில் இரண்டாவது சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்கிற தமிழக முதல்வரின் அறிவிப்பிற்கு கோவை மாவட்ட மக்கள் சார் பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விளையாட்டின் மீது பேரார்வம் கொண்ட இளைஞர்கள் அதிகம் இருக்கும் மாவட்ட மாக கோவை மாவட்டம் உள்ளது. இந் நிலையில், இளைஞர்களை மேலும் ஊக்கு விக்கும் வகையில், தமிழக முதல்வரின் அறி விப்பு இளைஞர்களுக்கு மேலும் உற்சாகத் தையும், ஊக்கத்தையும் அளிக்கும். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு மீண்டும் எனது சார்பிலும், கோவை மாவட்ட மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். கோவையில் அமைக்கப்படும் மைதா னம், சென்னையின் அடையாளமாக இருக் கும் சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்து, தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானமாக இருக்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் கூடுதலாக கோவையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி விளையாட்டு ஆர்வலர் கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வர வேற்பை பெற்றுள்ளது.