districts

img

உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு

சேலம், பிப்.4-    சேலத்தில் உலக புற்று நோய் தினம் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது.  உலக சுகாதார நிறுவனம் சார்பில் பிப்ரவரி 4 ஆம் தேதி யன்று உலக புற்று நோய் தின மாக அனுசரிக்கப்பட்டு வரு கிறது. இந்த தினத்தில் புற்று நோய் குறித்த தடுப்பு முறை கள், சிகிச்சை குறித்த விழிப்பு ணர்வை மக்களுக்கு ஏற் படுத்தப்பட்டு வருகிறது. அதன்ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பகுதியில் தனியார் கல்லூரி யின் சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசு ரங்களை மாவட்ட காவல்துறை துணை தலைவர் பிரவீன்குமார் அபிநவ் வழங் கினார். அதனைத்தொடர்ந்து புற்றுநோய் ஒழிப்போம் என்ற பதாகையில் கையெ ழுத்திட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி, புற்று நோயாளிகளுக்கு சிறந்த சேவையாற் றியவர்கள் மற்றும் சேவை புரிந்து வருப வர்களை கௌரவிக்கும் விதமாக வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், மாணவர்கள் மற்றும் மருத்து வர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.