திருப்பூர், ஜூன் 14 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2 சார்பாக உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு புதனன்று திருப்பூர் அரசு தலைமை மருத்துவம னையில் உள்ள ரத்த வங்கியில் ரத்த தான முகாம் நடைபெற் றது. இந்த நிகழ்வில் அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்கு மார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நல்லூர் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி கலந்து கொண்டு ரத்த தான முகாமை துவங்கி வைத்தார். மாணவர்கள் ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் ரத்தம் கொடுங்கள், பிளாஸ்மா கொடுங்கள், வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற மைய கருத்தை வலியுறுத்தி மாணவ செயலர்கள் ராஜபிரபு, விஜய், காமராஜ், மது கார்த்திக், பூபதிராஜா ஆகியோர் தலை மையில் ரத்த தான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இம்மு காமில் 19 யூனிட் ரத்த தானம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவர்கள் சிந்தியா, முரளி கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு தானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி னர்.