districts

img

பக்கவாதநோய் ரத்த உறைவு நீக்க பயிலரங்கம்

கோவை, ஜூன் 21-  கோவை அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் பக்கவாத நோய் ரத்த உறைவு நீக்கம் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சைத்துறை சார்பாக மூளையில் ரத்த உறைவினால் ஏற் படும் பக்கவாதத்தை சரி செய்யும் பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் அ.நிர்மலா துவக்கி வைத்து பேசுகையில், பக்கவாத நோய் சிகிச்சை தமிழ்நாடு அரசு  விபத்து மற்றும் அவசர சிகிச்சை  பிரிவின் ஒரு அங்கம். நோயாளிக ளுக்கு பக்கவாதத்தின் அறிகுறிகள் தோன்றிய உடனே மருத்துவம னைக்கு விரைவாக அழைத்து வர  வேண்டும். மூளை ரத்த உறைவி னால் பக்கவாதம் ஏற்பட்ட மூன்று  மணி நேரத்திற்குள் மருத்துவம னைக்கு அழைத்து வந்தால், நோயா ளிகளுக்கு உறைவு நீக்க மருந்து  செலுத்தியும், சில நோயாளிக ளுக்கு ரத்தநாள அகநோக்கி மூல மாக ரத்த அடைப்பை நீக்கியும் சிகிச்சை அளித்தால், பக்கவாதம் முழுவதுமாக குணமாக வாய்ப்புள் ளது. மேலும், ரத்த அகநாள ஆய்வு  மையம் மூலம் சிறிய ஊசி வழியாக  நுண்ணிய குழாய்களை ரத்தநாளங் களில் செலுத்தி மூளை ரத்தக்குழா யில் ஏற்படும் வீக்கம், வெடிப்பு, மேலும் கருப்பை, நுரையீரலில் ஏற் படும் கட்டுப்படாத ரத்தக் கசிவு, உட லில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்ப டும் அடைப்பு ஆகியவற்றை சரி செய்யும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி 2019  ஆம் ஆண்டு முதல் 625 நோயாளி கள் இச்சிகிச்சை மையத்தால் பயன்  பெற்றுள்ளனர். இதில், நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் 279 நோயாளிக ளுக்கு ஆஞ்சியோ சோதனையும், 7  நோயாளிகளுக்கு மூளை ரத்த நாள  வீக்கத்தை சரிசெய்யும் சிகிச்சை யும், 3 நோயாளிகளுக்கு மூளையில் ரத்த நாளத்தில் ரத்த உறைவை அகற்றும் சிகிச்சையும், ஒரு நோயா ளிக்கு மூளை இரத்த ஒட்டத்தை சரி  செய்யும் சிகிச்சையும் கொடுக்கப் பட்டது. ரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவில் 229 நோயாளிகளுக்கு ஆஞ்சியோ சோதனையும், 98 நோயாளிகளுக்கு உடலிலுள்ள பல்வேறு பகுதிகளில் ரத்தக்குழாய் அடைப்பு நீக்குதல், ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சையும் மேற் கொள்ளப்பட்டது. கதிரியக்கவியல் பிரிவில் 8 நோயாளிகளுக்கு கட் டுப்படாத நுரையீரல் ரத்தக் கசிவை  சரிசெய்யும் சிகிச்சையும், 2 நோயா ளிகளுக்கு கர்பப்பையில் அதிக மான ரத்தப் போக்கை சரி செய்யும்  சிகிச்சையும், ஒரு நோயாளிக்கு வயிற்றில் புற்றுநோயில் ரத்தக்க சிவை சரி செய்யும் சிகிச்சையும், ஒரு  நோயாளிக்கு சிறுநீரகத்தில் ரத்த கசிவை சரி செய்யும் கிசிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 பேருக்கு ஆஞ்சியோ சோதனை சிகிச்சையும் வழங்கப்பட் டது.

இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் 3 முதல் 7 லட் சம் வரை செலவாகும். நமது அரசு மருத்துவமனையில் முதலமைச்ச ரின் விரிவான மருத்துவக் காப்பீட் டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவ சமாக செய்யப்படுகிறது. பொதுமக் கள் இச்சிகிச்சை வசதியை நம் மருத் துவமனையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இந்த பயிலரங்கத்தின் நோக்கம் பக்கவாதநோய் ரத்த உறைவு நீக் கம், இந்த சிகிச்சைகள் கோவை அரசு மருத்துவமனையில் சில மருத் துவர்களே செய்யக்கூடிய நிலை யில் இருக்கிறது. ஆகவே, அனைத்து மருத்துவர்களும் பயிற்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பயிலரங்கு நடத்தப்பட்டது. இந்த பயிலரங்களில் மருத்துவக் கல்லூரியில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், நரம்பியல் நிபுணர்கள், கதிரியக்க வியல் நிபுணர்கள், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள், பட்ட  மேற்படிப்பு மாணவர்கள், சுமார் 50  மருத்துவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்கள்.