திருப்பூர், மார்ச் 15 - திருப்பூரில் சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் உழைக்கும் பெண்கள் தின விழா கருத்தரங்கம், கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்ட ரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த விழாவிற்கு திருப்பூர் மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழு கன்வீனர் எம்.பாக்கி யம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கே.எல் லம்மாள் வரவேற்றார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் கு.சரஸ்வதி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராணி, ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட் டப் பொருளாளர் பி.ஜெயலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்த கருத்தரங்கில் உழைக்கும் பெண்களும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் சிஐ டியு மாநிலச் செயலாளர் எம்.மகாலட் சுமி கருத்துரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், ஒன்றிய அரசின் தொழி லாளர் விரோத, பெண்கள் விரோத செயல்பாட்டை அம்பலப்படுத்தி னார். அங்கன்வாடி ஊழியர், மக் களை தேடி மருத்துவம், தூய்மை பணியாளர் உள்ளிட்டவர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியராக நிய மிக்க வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருளுக்கு 18 சதவிகிதம் வரி உயர்வு செய்யும் அரசு ஆடம்ப ரப் பொருட்களான வைரம் உள்ளிட்ட ஆபரணங்களுக்கு 3 சதவிகிதம் வரி விதித்துள்ளது. அனைத்து வேலை களிலும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதை உத்தரவாதம் செய்ய வேண்டும், நூறு நாள் வேலைக்கு ரூ.2 லட்சத்து 72 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டிய அவசியம் உள் ளது. ஆனால் அதற்குப் பதில் வெறும் ரூ.6 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி ஒன்றிய அரசு கிராமப்புற மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை நாச கரம் செய்துள்ளது என்று சாடினார். இந்த விழாவில் வி.எஸ்.நிரஞ் சனா, வி.எஸ்.கீர்த்தனா, பகத்சிங் சிலம்பாட்டக்குழு, அங்கன்வாடி, மக ளிர் சுகாதார பணியாளர் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் கே.சஜீனா நன்றி கூறி னார்.