கோவை, ஆக.16- வயநாடு பேரிடரில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு, சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் கோவையில் உண்டியல் மூலம் நிதி திரட்டி அனுப்பி வைத்தனர். வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள் ளனர். அவர்களுக்கு உதவும் வகை யில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் உண்டியல் மூலம் ரூ. 33 ஆயிரம் நிதி திரட்டினர். இதனை, வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட் டக்குழு அலுவலகத்தில், சிஐடியு மாவட்டத் தலைவர் மனோகரன் மற் றும் பொருளாளர் ஆர்.வேலுசாமி ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இந் நிகழ்வில், சிஐடியு ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் இரா.செல்வம், பொதுச்செயலாளர் எம்.கே.முத்துக் குமார், பொருளாளர் எம்.மைக்கல் சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங் கேற்றனர். மாவட்டம் முழுவதும் சிஐடியு- வுடன் இணைக்கப்பட்ட அனைத்து சங்கங்களும் வெள்ள நிவாரண நிதி திரட்டி வருகின்றனர். அரசு ஊழியர் சங்கம் இதேபோன்று, நாமக்கல் மாவட் டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் நிவாரண நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமை யில், ராசிபுரம் வட்டக்கிளை நிர் வாகிகள் ஸ்ரீதர், வினோத்குமார் உள் ளிட்டோர் நிதி திரட்டினர்.