districts

நெருக்கடியின் சுமையைச் சுமக்கும் தொழிலாளர்கள்

திருப்பூர், அக். 5 - திருப்பூரில் பின்னலாடைத் தொழில் நிறு வனங்களில் உற்பத்தி குறைந்திருக்கும் நிலையில் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு, வருமானம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. பின்னலாடைத் தொழில் நகரமான திருப் பூர் கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகி றது. பின்னலாடை உற்பத்திக்கு மூலப்பொ ருளான நூல் விலை கடந்த ஓராண்டு காலமாக  கடுமையாக உயர்ந்து வந்த நிலையில் சிறு,  குறு நிறுவனங்கள் விலை கட்டுப்படியாகா மல் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் தொடர்  விளைவாக பின்னலாடைத் தொழிலாளர்க ளுக்கும் வேலையிழப்பு, வருமான இழப்பு  ஏற்பட்டுள்ளது. நூல் விலை உயர்வு பிரதான  காரணமாக இருந்தாலும், வேறு பல காரணங் களும் சேர்ந்து கொண்டதால் பின்னலாடை தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கடுமையாக சுருங்கியுள்ளது. அனைத்துப் பிரிவு தொழிலாளர்களும் வேலை இழப்பை யும், வருமான இழப்பையும் சந்தித்து வருகின் றனர்.  பின்னலாடை நிறுவனங்களில் சீரான  வேலை இருக்கும் போது, தினமும் ஓவர் டைம் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் தற்போது ஓவர்டைம் வேலை இல்லை. மாலை 6 மணிக்கு வேலை நேரம்  முடிந்து விடுகிறது. மேலும் வாரம் முழுவ தும் வேலை கொடுப்பதில்லை. வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் வேலை தரும் நிலை  பல நிறுவனங்களில் உள்ளது.

இந்த நிலையில் தொழிலாளர்களுக்கான சராசரி வருமானம் பாதிக்கப்பட்டு அவர்கள்  வீட்டு வாடகை தருவது, உணவு மளிகைக்கு  செலவிடுவது, மருத்துவச் செலவு உள்பட சமாளிக்க முடியாமல் நெருக்கடியைச் சந்திக் கின்றனர். மளிகைக் கடை நடத்தும் பார்வதி  என்பவர் கூறும்போது, தனது கடையில் வட  மாநிலத் தொழிலாளர்கள் கணக்கு வைத்து  வாரந்தோறும் காய்கறி, மளிகை சாமான் கள் வாங்கிச் செல்வார்கள். சனிக்கிழமை சம் பளம் வாங்கி வந்து அந்த வாரக் கடனை  அடைப்பார்கள். ஆனால் கடந்த சில வாரங் களாக அவர்கள் கடைப் பக்கம் வருவ தில்லை. கடனும் அப்படியே நிலுவையில் உள்ளது”, என்றார். அவர்களிடம் கடன்  தொகையை கேட்டபோது, வேலையில்லை, வேலை கிடைத்ததும் கடனைக் கட்டுகிறோம்  என்று கூறுவதாகவும், அவர்களே அன்றாடம்  உணவுக்கு எப்படி சமாளிக்கிறார்கள் என்று  தெரியவில்லை என்றார் பார்வதி. பெரிய நிறுவனங்களில் விடுதிகளில் தங்க வைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், அந்த நிறுவனங்களில் வேலை இல்லாததால் விடுமுறை அளிக்கப்படுகிறது. தொடர்ச்சி யாக விடுமுறை விடப்படுவதால் அறையைக்  காலி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படு கிறது, ஆனால் அந்த தொழிலாளர்கள் வெளியே சென்றால் கையில் காசில்லா மல், வாடகைக்கு அறை பார்க்க முடியாமல்,  வேறெங்கு தங்குவது என்ற கேள்வியுடன் தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிறுவ னங்களில் வேலை இல்லாவிட்டாலும், அவர் களது விடுதியிலேயே தங்கிக் கொள்வதாக வும், வெளி வேலைக்குச் சென்று அறை வாடகை தருவதாகவும் கேட்கும் நிலை உள் ளதாக உற்பத்தியாளர் தரப்பில் கூறினர். சில மாதங்களுக்கு முன்பு, உள்ளூர்  தொழிலாளர்களுக்கு வேலையில்லை, எல்லாம் வெளி மாநிலத் தொழிலாளர்க ளுக்கு வேலை தரப்படுகிறது என்று சொல்லப் பட்டது. ஆனால் இப்போது விடுதிகளில் தங்க  வைக்கப்பட்ட வெளி மாநிலத் தொழிலாளர் களுக்கும் வேலை இல்லை. தற்போதைய நிலை மேலும் மோசமடைந்திருப்பதைக் காட் டுகிறது.

எல்லாவற்றுக்கும் இறுதியாக, தொழி லில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியின் சுமை யைத் தொழிலாளர்களை சுமக்கும் நிலை  ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் கார்ப்பரேட் டுகளுக்கு ஆதரவான கொள்கைதான் உள் நாட்டு, சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை நெருக்கடிக்குள் தள்ளி காவு வாங்குவதாக உள்ளது.  தொழிலாளர்களின் வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் பாதுகாப் பதற்காக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின் றன.  திருப்பூர் பனியன் தொழிலைப் பாதுகாக் கவும், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் ஒன்றிய அரசு தனது தவ றான கொள்கைகளைக் கைவிட வேண்டும். உள்நாட்டு சந்தையில் மக்களின் வாங்கும் சக் தியை அதிகரிக்கவும், அதன் மூலம் உள் நாட்டு பின்னலாடை ஜவுளித் தொழில் நீடித்து  நிலையாக செயல்படவும், தொழிலாளர்க ளுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கவும், இந்த தொழிலில் குறைந்த பட்ச ஊதியச் சட்டப்படி அனைத்து தொழிலா ளர்களுக்கும் உரிய ஊதியம் கிடைக்கவும் ஒன்றிய அரசு அவசர அவசிய உணர்வுடன் தலையிட வேண்டும் என்று சிஐடியு பனியன்  தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத் கூறினார்.