தாராபுரம், ஏப்.15- தாராபுரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி யான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் அடுத்துள்ள அலங்கியம் காந்திநகர் பகுதியை சார்ந்த சக்திவேல் என்பவரது மகன் பிரகாஷ் (27). இவர் அப்பகுதியில் கருணா என்பவரது வெல்டிங் பட்டறையில் வெல்டராக வேலை செய்து வந்தார். இவர் செவ்வாயன்று மாலையில் இரும்பு கதவுக்கு வெல்டிங் அடிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பிரகாஷ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை உடனடியாக அவசர சிகிச்சைக்காக தனியார் ஆம் புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதனை செய்த மருத் துவர்கள் பிரகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித் துள்ளனர். இதுகுறித்து அலங்கியம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் சாரம் தாக்கி இறந்த பிரகாஷ்க்கு சரிதா என்ற மனைவியும் ஒன்றரை வயது குழந்தையும் உள்ளனர். இச்சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.