திருப்பூர் நவ. 29 – திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் தர மற்ற தார்ச்சாலை அமைக்கப்பட்டதால், மார்க்சிஸ்ட் கட்சியினர் தலையிட்டு தரமான முறையில் சாலை அமைக்க வலியுறுத்தி அந்த பணியைத் தடுத்து நிறுத்தினர். திருப்பூர் மாநகராட்சியில் குமார்நகர் முதல் சாமுண்டிபுரம் வழியாக சிறுபூலுவ பட்டி வரை குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை அமைக்க சாலை தோண்டப்பட்டது. கடந்த மூன்றாண்டு காலமாக இந்த சாலை சீர மைக்கப்படாமல் குண்டும், குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு விட்டன. இப்பகுதியைச் சேர்ந்த லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் இந்த சாலையை முழுமையாக சீரமைக்க வேண் டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரி வருகின்றனர். இந்த சாலையை சீர மைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பல் வேறு இயக்கங்கள், போராட்டங்கள் நடத்தி யுள்ளனர். இத்துடன் இப்பகுதியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களும் மாநகராட்சி மாமன்றம் மற்றும் முதலாம் மண்டலக் கூட்டத் திலும் இந்த சாலையை சீரமைக்க வேண் டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த னர். இந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சிறு பூலுவபட்டி முதல் சாமுண்டிபுரம் வரை உள்ள சாலையில் கடந்த சில நாட்களாக சாலை சீரமைப்புப் பணி நடைபெறுகிறது. இதில் ஏற்கெனவே குண்டும், குழியுமாக உள்ள இடத்தில் மட்டும் தார் மற்றும் ஜல்லி யைக் கொட்டி சமப்படுத்தி மேம்போக்காக பணி செய்யப்பட்டுள்ளது. அரைகுறையாக வேலை செய்யப்பட்ட இடத்தில் ஜல்லி கற் கள் சிதறி இருந்ததால் அதில் இருசக்கர வாக னத்தில் பயணித்தவர்கள் அடுத்தடுத்து கீழே சரிந்து விழுந்தனர்.
இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரக்குழு உறுப்பினர் ராம் ஆனந்த் உள் ளிட்டோர் அங்கு சென்று தரமான முறை யில் சாலை அமைக்க வேண்டும், மேம்போக் காக வேலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று கூறினர். எனினும் அவர்கள் தொடர்ந்து வேலை செய்ய முயன்றனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் பேச்சு வார்த்தை நடத்தினார். எனினும் தரமில்லா மல் சாலை அமைப்பதை ஏற்க முடியாது. பெயரளவுக்கு ஒட்டு வேலை செய்வதால் பயனில்லை. ஏற்கெனவே மூன்றாண்டு கால மாக இப்பகுதி மக்கள் இந்த மோசமான சாலையைத் தான் பயன்படுத்தி வரு கின்றனர். எனவே மீண்டும் ஒப்புக்கு வேலை செய்வதால், இப்பகுதி போக்குவரத்துக்கு பயனளிக்கப் போவதில்லை. தரமான சாலை அமைக்கும் வரை இதே நிலை தொடர்ந்தாலும் நாங்கள் பொறுத்துக் கொள் கிறோம். ஆனால் சாலை அமைப்பதாக இருந் தால் முழுமையாக தோண்டி பழைய குண் டும், குழியுமான பகுதிகளையும் சீரமைத்து முழுமையாக தரமான தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறினர். சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அலு வலர்களும் பேச்சுவார்த்தை நடத்திய நிலை யில் மார்க்சிஸ்ட் கட்சியினர் உறுதியாக எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் ஒட்டு வேலை செய்வதை நிறுத்தி விட்டு, அங்கிருந்து புறப் பட்டுச் சென்றனர்.