districts

img

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் பேக்கரிகளில் கேக் தயாரிக்கும் பணி தீவிரம்

நாமக்கல், டிச.24- கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, பேக்கரிகளில் வித விதமாக கேக் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருடம் முழுவதும் ஜனவரி துவங்கி பல விசேஷ தினங்கள் இருந்தாலும், டிசம்பர் மாத இறுதியில் கொண்டாடப்படும் கிறிஸ்து மஸ் பண்டிகை மற்றும் ஆங்கில புத்தாண்டு  மிகவும் கவனம் பெற்றதாக உள்ளது. வரு டத்தின் கடைசி மாதமான டிசம்பர் 25 தேதி களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையும், வரு டத்தின் கடைசி இறுதி நாள் இரவு முடி வுற்று, அடுத்த நாள் ஜனவரி 1 ஆங்கில புத் தாண்டு பிறக்கும் நாளும் மிகவும் விசேஷ மிக்க நாளாக கருதப்படுகிறது. இப்படி கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆங்கில புத்தாண்டு என்றாலே பல்வேறு கொண் டாட்டங்களும், கேளிக்கைகளும் நிறைந்து காணப்படுகிறது.  கிறிஸ்துவர்களின் மிக முக்கியமான பண்டிகையாக இது பார்க்கப் பட்டாலும், சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை. இந்தியாவில் சகோதர பாசத்துடன் கொண் டாடி வருகின்றனர். மேலும், கிறிஸ்துமஸ் தினம் மற்றும் ஆங்கில புத்தாண்டு என்றாலே  தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக கேக்கு கள் உள்ளது. வண்ண நிறங்களில் பல்வேறு  சுவைகளில் பிரத்தியேகமான கேக்குகள் வாங்கி அதை பலருக்கும் பகிர்ந்து கொடுத்து வருவது தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. அதனடிப்படையில் கிறிஸ்துமஸ் தின  விழா புதனன்று (இன்று) உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு தேவையான பல வண்ண விதவிதமான வடிவங்களில் பிரத்தியேகமான கேக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  நாமக்கல் - பள்ளிபாளையம் சாலையில் உள்ள பேக்கரியில், கேக் தயாரிப்பில் நீண்ட காலமாக இருக்கும் கதிரவன் என்பவர் கூறுகையில், வருடம் முழுவதும் பல்வேறு நாட்களில் திருமண விழா, பிறந்தநாள் விழா, கேளிக்கை கொண்டாட்ட நிகழ்வுகள் என பல்வேறு தேவைகளுக்கு பொதுமக்கள் அவ்வப்போது எங்கள் பேக்கரியில் தயா ராகும் கேக்குகளை வாங்கிச் செல்கின்ற னர். இருந்தபோதிலும் வருடத்தின் இறுதி யில் தான் அதிக அளவு கேக்குகள் விற்பனை யாகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தின விழா, அதை காட்டிலும் அடுத்த சில நாட்களில் ஆங்கில புத்தாண்டு வருவதால் அதனை கொண்டா டும் வகையில் பலரும் கேக்குகளை வாங்கு கின்றனர். தோராயமாக அரை கிலோ முதல் 10 கிலோ வரை, தேவையை பொருத்து ஆர் டரின் பெயரில் கேக்குகளை தயார் செய்து கொடுக்கிறோம். தற்போது கிறிஸ்துமஸ் விழா, ஆங்கில புத்தாண்டு உள்ளிட்டவை அடுத்தடுத்து வருவதால், அதிகளவு ஆர்டர்கள் குவிந்துள்ளது. மூலப் பொருட்கள் விலை ஏற்றம் உள் ளிட்ட பல்வேறு காரணிகளால் கடந் தாண்டை காட்டிலும், இந்த ஆண்டு விலை சற்று கூடுதலாக இருப்பதற்கான வாய்ப்பு கள் உள்ளது. வருடம் முழுவதும் கேக் தயா ரிப்பில் ஈடுபட்டு வந்தாலும், டிசம்பர் மாத இறுதியில் தான் வேலை அதிகமாக இருப்ப தால் தொழிலாளர்களும் உற்சாகமாக கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், என்றார்.  -எம்.பிரபாகரன்