திருப்பூர், மார்ச் 8- பெண்கள் தங்கள் இள வயது லட்சி யத்தை முடக்கிக் கொள்ளக் கூடாது. ஒரு செயல் முறையை தேர்ந்தெடுத்து செயல் பட்டால் எதையும் சாதிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.எஸ்.நப் பினை கூறினார். திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா வெள்ளியன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப் புரை ஆற்றிய வழக்கறிஞர் நப்பினை கூறிய தாவது: பெண்கள் வழக்கறிஞர் தொழிலுக்கு வரும் பொழுது துவக்கத்தில் குடும்பமா? வழக்கறிஞர் தொழிலா? எது முக்கியம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் ஆண்களுக்கு இது போன்ற கேள்வி இல்லை. பெண்களால் இரண்டையுமே சாதிக்க முடியும். பெண்கள் தங்கள் இள வயது லட்சியத்தை முடக்கிக் கொள்ளக் கூடாது. தோற்றத்தை வைத்து முடிவு செய் யக்கூடாது. நீங்கள் ஒரு செயல் முறையை எடுத்துக்கொண்டு செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும். சைபர் வழக்குகள் என்பது இப்பொழுது எல்லாவற்றிலும் இடம் பெறுகிறது. குற்றவி யல், திருமண உறவு, சிவில் வழக்குகள் என்று அனைத்திலும் தகவல் தொழில்நுட்பம் தொடர்புடைய சைபர் குற்றங்கள் இடம் பெறுகின்றன. ஒரு வழக்கறிஞர் ஆரம்பத்தில் குற்ற வியல் வழக்குகளில் தன் பணியை தொடங் கினால் அதை மட்டுமே செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் செயல்படும் முறையில் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு வெவ்வேறு வழக்குகளிலும் திறம் பட செயலாற்ற முடியும். வெற்றி பெற முடி யும். அதற்கு தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் கூறி னார். முன்னதாக, இந்த விழாவில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா வரவேற்றார். மோட்டார் வாகன விபத்துக்கள் வழக்கு சிறப்பு நீதிமன்ற மாவட்ட சிறப்பு நீதிபதி பாலு, திருப்பூர் பார் அசோசியேஷன் தலைவர் எம்பழனிச்சாமி, திருப்பூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆர்.ரகுபதி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தலைமை உரை யாற்றினார். அவர் பேசும் பொழுது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் நப்பினை கூறியது போல இளம் வழக்கறிஞர்கள் புதிய விஷ யங்களை கற்றுக்கொண்டு நீதித்துறைக்கு சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறி னார். இந்த விழாவில் மாவட்டம் முழுதும் இருந்து நீதிபதிகள், அவர்களது குடும்பத் தார், வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழி யர்கள் திரளாக பங்கேற்றனர். நிறைவாக திருப்பூர் எண் ஒன்று நீதித்துறை நடுவர் பாரதி பிரபா நன்றி கூறினார்.