ஈரோடு, பிப்.23- அம்மாபேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறி யல் செய்தனர். அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடம் பேரூராட்சி குட்டைமேடு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீர் போது மானதாக இல்லை என்று ஒலகடம் பேரூ ராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக் கள் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். இத னைத்தொடர்ந்து கடந்த 15 நாட்களாக குட்டை மேடு பகுதிக்கு ஆற்று குடிநீர் விநியோகிக்கப்படாத நிலையில், ஆவேச மடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறி யலில் ஈடுபட்டனர். பவானி மற்றும் வெள்ளி த்திருப்பூர் முக்கிய சாலையில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தனர். இதனடிப்படையில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.