உதகை, செப்.19- ஒன்றிய அரசு, தேயிலைக்கு உரிய விலை வழங்கக்கோரி 19ஆவது நாளாக கேத்தொரை கிராமத்தில் செவ்வா யன்று விவசாயிகளுக்கு ஆதரவாக பெண்கள் உண்ணாவிரத போராட்டத் தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்ட மக்களின் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக் காத நிலையில், விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். உரிய விலை வழங்கக் கோரி தொடர்ந்து போராடி வருகின் றனர். இந்நிலையில், கடந்த செப்.1 ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாக்குபெட்டா படுகர் நலச் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அழைப்பு விடுக் கப்பட்டிருந்தது. இதனை ஏற்று அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரு கின்றனர். ஊட்டி அருகேயுள்ள கேத்தொரை பகுதியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக பெண்கள் திரளாக பங்கேற் றனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறுகை யில், சென்னை உயர்நீதிமன்றம் பசுந் தேயிலைக்கு உரிய விலை வழங்கக் கோரி வழங்கிய ஆணையை நிறை வேற்ற வேண்டும். பசுந்தேயிலை கிலோ ஒன்றிற்கு ரூ.35 வழங்கிட வேண்டும். தேயிலை சட்டத்தின் 30வது பிரிவை அனைத்து தரப்பிருக்கும் நடை முறைப்படுத்த வேண்டும். நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயி களின் வாழ்வாதாரம் மற்றும் நலனை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றனர். 19ஆவது நாளாக நீலகிரி மாவட்டத் தில் பல்வேறு பகுதிகளிலும் விவசாயி கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டுள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.