கோவை, ஏப்.13- மகளிர் சட்ட உதவி மன்றத்தின், தமிழ் நாடு மையத்தின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பில், தமிழ்நாடு மகளிர் சட்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. மகளிர் உரிமைகளை பெறுவதற்கு சட்ட போராட் டத்தை முன்னெடுக்கவும், இலவச சட்ட ஆலோசனைகளை இம்மையம் வழங்கி உதவி புரிகிறது. இம்மையத்தின் கலந்தாய்வுக் கூட்டம் வியாழனன்று, பெண்கள் தோழமை அமைப்புகளுடன் இனைந்து கணபதி சிஐடியு இன்ஜினியரிங் அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு, மாதர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பிரமிளா தலைமை ஏற்றார். இதில், உண்மையை கண்டறியும் குழுவின் மாநில பொறுப்பாளர்களில் ஒருவரான நிர்மலா ராணி, மாதர் சங்க அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி, மாநில குழு உறுப் பினர் ராஜலட்சுமி, தோழி அமைப்பின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் நாகலட்சுமி, சத் துணவு ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர் சாரதா மணி, சிஐடியு லலிதாமணி, திவிக நேருதாஸ், இந்திய மாணவர் சங்கத்தின் அசாருதீன், மாதர் சங்க சங்க மாவட்ட செய லாளர் சுதா, மாவட்ட தலைவர் ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.