சிபிசிஐடி எனக்கூறி பணம் பறித்த பெண் கைது
சிபிசிஐடி எனக்கூறி பணம் பறித்த பெண் கைது கோபி, பிப்.15- கோபி அருகே சிபிசிஐடி போலீஸ் எனக்கூறி பணம் பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள வெள்ளாள பாளையம் ஊத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ் வரி (32) பனியன் கம்பெனி டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் குணசேகரன். இவர்களுக்கு இரு குழந்தை கள் உள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி கடந்த 8 ஆம் தேதி யன்று அவருடைய நண்பர்களான விஜயகுமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோரை வீட்டிற்கு வருமாறு கூறி உள்ளார். இதில் விஜயகுமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் ராஜேஸ் வரியின் வீட்டிற்கு சென்று அவரிடம் பேசிக்கொண்டு இருந்த னர் அப்பொழுது இரண்டு நபர்கள் ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்து, ‘நாங்கள் சிபிசிஐடி போலீசார்’ எனக்கூறி ராஜேஸ்வரி உடன் தொடர்பு ஏற்படுத்தி பேசி விஜயகுமார் மற்றும் விஸ்வ நாதனை மிரட்டி விஜயகுமார் அக்கவுண்டில் இருந்து ரூ.95 ஆயி ரமும் விசுவநாதன் என்பவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம் அடையாளம் தெரியாத நபர்களுக்கு மாற்றி உள்ள னர். இருவரும் பயந்து அன்றைய தினம் வீட்டிற்கு சென்று விட்டனர். இதுகுறித்து கடந்த 10 ஆம் தேதியன்று நம்பியூர் காவல்நிலையத்தில் விஜயகுமார் புகார் மனு அளித்தார். அத னைத்தொடர்ந்து ராஜேஸ்வரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் எனக்கூறி பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆதார் சேவை மையம் மூடல்: மக்கள் அவதி!
ஆதார் சேவை மையம் மூடல்: மக்கள் அவதி! கோவை, பிப்.15- சூலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த ஆதார் சேவை மையம் திடீரென மூடப்பட்டதால், பொது மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோவை மாவட்டம், சூலூர் தாலுகா அலுவலக வளா கத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ- சேவை மையத்துடன் ஆதார் சேவை மையமும் செயல் பட்டு வந்தது. இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக் கள் ஆதார் அட்டைக்கு புதிதாக விண்ணப்பிக்கவும், திருத் தம் மேற்கொள்ளவும் வந்து செல்வது வழக்கம். இந்நிலை யில், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஆதார் சேவை மையம் திடீரென மூடப்பட்டது. மையத்தின் வாயில் கதவில், “ஆதார் சேவை மையம் தற்காலிகமாக செயல்படாது” என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சேவை மையம் மூடப்பட்டதால், பொதுமக்கள் ஏமாற் றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். சூலூர் மற்றும் சுற்றுவட் டார கிராமங்களில் இருந்து ஆதார் சேவைக்காக சூலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இந்த மையத்தை தான் பொது மக்கள் நாட வேண்டியுள்ளது. ஆனால், திடீரென சேவை மையம் மூடப்பட்டுள்ளதால், அவர்கள் கடும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, “சூலூர் ஆதார் சேவை மையத் தில் பணியாற்றி வந்த தற்காலிக ஊழியர் திடீரென பணியை விட்டுச் சென்றதால், ஆதார் சேவை மையம் தற்காலிக மாக மூடப்பட்டுள்ளது. புதிய ஊழியருக்கான தேர்வு நடத் தப்பட்டு விட்டது. விரைவில் புதிய ஊழியர் நியமிக்கப் பட்டு, ஆதார் சேவை மையம் வழக்கம் போல இயங்கும்” என்று தெரிவித்தனர்.
மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி சேலம், பிப்.15- சேலம் மாநகர காவல் துறை சார்பில், மாவட்ட அள விலான கைப்பந்து போட்டி சனியன்று துவங்கியது. காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே நல்லு றவை ஏற்படுத்தும் வகை யில், சேலத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி சனியன்று துவங்கி யது. இப்போட்டியை மாநகர காவல் ஆணையாளர் பிர வீன்குமார் அபினபு தொடங்கி வைத்தார். முன்னதாக, சாலைப் பாதுகாப்பு குறித்து (NO HELMET NO KEY) விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பகல் இரவு ஆட்டங்களாக 2 நாட்கள் நடைபெறும் இப்போட்டி யில் 30 ஆடவர் அணிகளும், 10 மகளிர் அணிகளும் பங் கேற்றுள்ளனர். இப்போட்டி யில் வெற்றி பெறும் அணி களுக்கு ஞாயிறன்று (இன்று) மாலை நடைபெறும் பரிச ளிப்பு விழாவில், வெற்றிக் கோப்பைகள், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங் கப்பட உள்ளன.
கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி கோவை, பிப்.15- சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 8 மணி வரை பனிமூட்டம் நிலவிய தால் வாகன ஓட்டிகள் அவ திக்குள்ளாகினர். கோவை மற்றும் திருப் பூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிக்காலம் நிலவி வருகி றது. இரவு வேலைகளில் குளிர் நிலவுவதோடு, பகல் வேலைகளில் கடும் வெயி லும் வாட்டி எடுக்கிறது. இந் நிலையில், கோவை புறநகர் பகுதிகளான சூலூர், வதம் பச்சேரி உள்ளிட்ட சுற்று வட் டாரப் பகுதிகளில் சனியன்று காலை 8 மணி வரை பனி மூட்டம் நிலவியது. அவ்வழி யாக செல்லும் வாகன ஓட்டி கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி குறைவான வேகத்தில் வாகனங்களை இயக்கினர். கடந்த சில நாட்களாக காலை வேலைக ளில் கடும் குளிர் நிலவுவ தால், அன்றாடப் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த காலநி லையை ரசித்து வருவதாக பொதுமக்கள் கூறினர்.
கோவை மாநகராட்சிப் பள்ளியில் விரிச்சுவல் ரியாலிட்டி ஆய்வகம்
கோவை, பிப்.15- தமிழகத்தில் முதன்முறையாக, கோவை மாநகராட்சிப் பள்ளிகளில், அறிவியல் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஏ.ஆர்., - வி.ஆர்., என்கிற தொழில்நுட்ப வசதிகளுடன் அறிவி யல் ஆய்வகங்கள் அமைக்கப்பட் டுள்ளன. ஏ.ஆர்., (Augmented Reality - AR) தொழில்நுட்பம் என்பது டிஜிட் டல் தகவல்கள், படங்கள், ஒலி மற் றும் 3டி மாடல்கள் போன்றவற்றை, ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட் கண்ணாடிகள் போன்ற சாதனங்கள் உதவியுடன் அறிவது. ஒரு மாணவர், இத்தொழில்நுட்பம் மூலமாக, தனது புத்தகத்தில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடத்தின் 3டி மாதி ரியை ஸ்மார்ட் போனில் பார்க்கலாம். இது, மாணவர்களின் கற்றல் அனு பவத்தை உணர்வுபூர்வமாக மாற் றும். இதேபோல், வி.ஆர்., (Virtual Reality - VR) என்பது கம்ப்யூட்டர் மூலம் மெய்நிகர் உலகத்தை உரு வாக்கும் தொழில்நுட்பம். ‘ஹெட் செட்’ அல்லது சிறப்பு சாதனங்கள் மூலம் அறியலாம். இத்தொழில்நுட் பத்தை பயன்படுத்தி, மாணவர்கள், சூரிய குடும்பத்தை அருகில் பார்க்க லாம் அல்லது ஒரு விஞ்ஞான ஆய்வ கத்தில் பங்கேற்பதை உணரலாம். இவ்விரு தொழில்நுட்பங்களு டன் கூடிய ஆய்வகங்கள், கோவை மாநகராட்சியில் ஆர்.எஸ்.புரம் எஸ். ஆர்.பி., அம்மணியம்மாள் மாநக ராட்சிப் பள்ளியில் அமைக்கப்பட்டி ருக்கிறது. இதன் மூலம் மாணவர்க ளுக்கு மேம்பட்ட கற்றல் அனுபவம் கிடைக்கும்; கடினமான பாடங்களை கூட எளிதாக புரிந்து கொள்ள முடி யும். இத்தொழில்நுட்பம் வாயிலாக கற்பிக்கும் முறைகள் மாணவர்க ளின் கவனத்தை ஈர்த்து, அவர்களின் ஆர்வம் மற்றும் ஈடுபாட்டை அதிக ரிக்கச் செய்யும். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாண வர்களுக்கு இதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாண வர்களை வழிநடத்த உள்ளனர். இந்த ஆய்வகங்கள் விரைவில் பயன்பாட் டுக்கு வர உள்ளன. இதுகுறித்து மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “ஏ.ஐ., தொழில்நுட்பம் அடிப்படையில், ‘விர்ச் சுவல் ரியாலிட்டி’யை கொண்டு வரும் வகையில் ஆய்வகம் அமைத்திருக் கிறோம். அறிவியல், வரலாறு மற்றும் கணிதம் சார்ந்த மாணவர்களுக்கு கிடைக்கும். காங்கேயம் காளையை பற்றி வகுப்பெடுக்கும் போது, காளை யின் புகைப்படம் மட்டும் இருக்கும். அதன் சிறப்புகளை ‘டிஜிட்டல்’ முறை யில் பார்க்கலாம். நிலவு எப்படி இருக் குமென நடந்து செல்வது போல் உண ரலாம். மின்சாரம் பாய்கிறதென்றால், எவ்வாறு கடத்திச் செல்லப்படுகி றது என்பதை உணர்வுப்பூர்வமாக அறியலாம். முதல்கட்டமாக, இரு பள்ளிகளில் அறிமுகப்படுத்துகி றோம். மாணவர்களின் ஆர்வத்துக் கேற்ப, மற்ற பள்ளிகளுக்கு விரிவுப டுத்தப்படும்’’ என்றனர்.
உலக வர்த்தக நிலைப்பாடு குறித்து கருத்தரங்கம்
அவிநாசி,பிப்.15 அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் சனியன்று உலக வர்த்தக நிலைப் பாடு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல், வணிக நிர்வாகம் சார்பில் இன்றைய உலக வர்த்தகத்தின் நிலைப்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் நளதம் தலைமை வகித் தார். கல்லூரி மாணவி ஹரிணி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கோவை அரசு கலைக் கல்லூரியின் வணிக வியல் துறை பேராசிரியர் ரவீந்திரன் கலந்துகொண்டு, இன்றைய வர்த்தகத்தின் நிலைப்பாடு குறித்து பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த கருத்தரங்கத்தை முனை வர்கள் அருண், சரோஜினி, தியாகராஜன் உள்ளிட்டோர் ஏற் பாடு செய்தனர்.
மரத்தை வெட்டியதாக நகைக்கடை உரிமையாளர் மீது புகார்
மரத்தை வெட்டியதாக நகைக்கடை உரிமையாளர் மீது புகார் அவிநாசி, பிப்.15 - அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த மரத்தை தனியார் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் வெட்டி யதாக சமூக ஆர்வலர் சனியன்று புகார் அளித்துள்ளார். அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலை யம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை பசுமை சாலை திட் டம் என்ற பெயரில் சாலை யோரங்களில் சமூக ஆர்வலர்கள் மூலம் பல்வேறு வகையான செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், 95 மரங்கள் வைக்கப்பட்டன. இந்த மரங்களை அருகா மையில் உள்ள இடத்தின் உரிமையாளர்கள் தினசரி தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகின்றனர். இதைதொடர்ந்து சமூக ஆர்வ லர்கள் மரத்தை பாதுகாக்கும் வகையில் கூண்டுகள் அமைத் துள்ளனர். இந்நிலையில், வருவாய்த் துறையிடம் உரிய அனுமதி பெறாமல், அரசுப் பள்ளி அருகே புதிதாக நகை கடை திறந்துள்ள கடை உரிமையாளர் ஒருவர் பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு இடையூறாக இருந்ததாகக் கூறி மரத்தை வெட்டி சாய்த்து உள்ளார். இத்தகவல் அறிந்த களம் அறக்கட்டளை நிர்வாகி சதீஷ், வருவாய் துறையிடம் புகார் அளித்துள்ளார். இதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க உள்ளதாக தெரி வித்துள்ளார்.
தனித்தீவு போன்ற பகுதிக்கு ஒரே மண் சாலை வேலி அமைக்க ரயில்வே நிர்வாகம் முயற்சிப்பதால் அச்சம்
திருப்பூர், பிப்.15- திருப்பூர் மாநகராட்சி, 25 ஆவது வார்டுக்கு உட்பட்ட அப்பல்லோ அகரம் அவென்யூ, அருள்ஜோதி நகர், ரத்தின புரி கார்டன் ஆகிய பகுதிகள், நொய் யல் ஆற்றுக்கு வடபுறமும், இருப்புப் பாதைக்குத் தென்புறமுமாக ஒரு தீவைப் போல அமைந்துள்ளன. இங்கு சுமார் 200 வீடுகள், 45க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. சுமார் 800 பேர் குடியிருப்போரும், ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 2,200 பேரும் என இவற்றில் 3,000 பேர் உள்ள னர். கடந்த 15 ஆண்டுகளாக மாநகராட் சிக்கும் இவர்களுக்கும் இருக்கும் ஒரே உறவு, வரி செலுத்துவது ஒன்றுதான். மற்றபடி, சாலை அமைப்பது, குடிநீர் வழங்குவது, தெரு விளக்குகள் அமைப்பது, குப்பைகள் அகற்றுவது, சுகாதாரப் பணிகள் மேற்கொள்வது போன்றவைக்கும் இவர்களுக்கும் எந் தத் தொடர்பும் இல்லை. அவற்றையும் இவர்களே சொந்த செலவில் ஓரளவு சமாளித்து வருகின்றனர். வஞ்சிபாளை யம் சாலையில் இருந்து இருப்புப் பாதை சிறுபாலம் எண் 435 ன் வழியாக உள்நு ழைந்து, வலதுபுறம் கரடுமுரடான மண் சாலையில் தட்டுத் தடுமாறிச் சென்றால் மேற்கண்ட குடியிருப்புகளுக்குச் செல்ல முடியும். இங்குள்ள மக்களின், தொழிற்சாலைகளின் ஒரே போக்கு வரத்து வழித்தடம் இந்த மண்சாலை மட் டுமே. இந்நிலையில், ரயில்வே துறை யின் சார்பில் கடந்த சில நாட்களாக இந்த மண்சாலையை அளந்து, வேலி அமைக்க முனைந்துள்ளனர். போக்குவரத்துக்கு என்று இருக்கும் ஒரே மண் சாலையும் அடைக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற பதட்டம் இப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் அதி கரித்துள்ளது. சாலை அடைக்கப்பட் டால், இங்குள்ள சுமார் 800 பேர் திறந்த வெளிச்சிறையில் அடைக்கப்பட்ட நிலைக்கு ஆளாக்கப்படுவர். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இப்பி ரச்சனை குறித்து வடக்கு சட்டமன்ற உறுப்பினர், மேயர், துணை மேயர், ரயில்வே துறை அதிகாரிகள் கவனத் திற்குக் கொண்டு போயுள்ளனர். தற்போதைய ரயில்வே நிர்வாகத் தின் நடவடிக்கைகளால் அச்சமடைந்த மக்கள், அணைப்பாளையம் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தொடர்பு கொண்டு, உதவி செய்ய கேட்டுக் கொண்டனர். உடனடியாக சிபிஎம், வேலம்பாளையம் நகரக் குழு வின் சார்பில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனுக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் த.கிறிஸ்துராஜை, நகரச் செயலாளர் ச.நந்தகோபால் தலைமையில், நகரக்குழு உறுப்பினர் அ.உமாநாத், ரங்கநாதபுரம் கிளைச் செயலாளர் எஸ்.செல்வகுமார் ஆகி யோருடன் ஆண்களும், பெண்களு மாக 20 பேர் நேரில் சந்தித்து, மனு அளித் தனர். பிரச்சனை தன் கவனத்திற்கு வந்தது என்றும், கோரிக்கை மனுக்கள் எதுவும் இதுவரை வரவில்லை, எனி னும் வட்டாட்சியர் மூலம் அளவீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்தார், இப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்ய வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனை ஏற்ற அவர், இரண்டொரு நாட்களில் வருவதாகத் தெரிவித்தார்.
பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு ரூ.9.37 லட்சம் நிவாரணத் தொகை வழங்கிய நிறுவனம்
திருப்பூர், பிப். 15 – திருப்பூர் வீரபாண்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஏ.ஜெ.நிட்ஸ் என்ற நிறுவனம் விதிமுறைகளைப் பின்பற்றா மல் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்ப டுத்தியதால் ரூ.9 லட்சத்து 37 ஆயிரம் இழப்பீடு வழங்க தேசிய பசுமைத் தீர்ப் பாயம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்த ரவின்படி அந்த நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்கியது. திருப்பூர் வீரபாண்டி பகுதியில் ஏ. ஜெ.நிட்ஸ் என்ற பெயரில் தனியார் நிறு வனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறு வனம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவைப் பெறாமல் முறைகேடாக இயக்கி நீர்நிலைகளுக்கு மோசமான பாதிப்பு ஏற்படுத்தியதாக பொதுமக்கள் புகார் கூறினர். இது பற்றி மாசு கட்டுப்பாட்டு வாரியம் குற்றச் சாட்டை விசாரித்து உறுதிப்படுத்திய நிலையில் ஏ.ஜெ.நிட்ஸ் நிறுவனத்திற்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிறுவனம் நீர்நிலைகளை மாசு படுத்தியிருப்பதுடன், பாதிப்பு ஏற்படுத் தும் வாயுக்களை வெளியேற்றி காற்று மாசும் ஏற்படுத்தியது என்றும் மாசு கட் டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்படுத்திய சுற்றுப்பு றச் சூழல் பாதிப்புகளுக்கு, சூழல் பாதிப் புக்குரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரி யம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிட்டது. மேற்படி நிறுவனத்தின் சார்பில் உரிய அனுமதி பெறப்பட்டு விட்டது என்பதால் மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை ரத்து செய்ய வேண் டும் என முறையிடப்பட்டது. எனினும் தேசிய பசுமைத் தீர்ப்பா யம் இந்த வழக்கை விசாரித்து, தற் போது மேற்படி நிறுவனம் உரிய அனு மதி பெற்று செயல்படத் தொடங்கினா லும், இதற்கு முன்னதாக சட்டவிரோத மாக இயக்கப்பட்டு, ஏற்படுத்திய சுற்றுப் புறச் சூழல் பாதிப்புகளுக்கு விதிக்கப் ்பட்ட அபராதம் அல்லது ஆலை மூடல் உத்தரவு என்பது பொருந்தக் கூடி யதே. எனவே அதற்குரிய சுற்றுப்புறச் சூழல் பாதிப்புத் தொகையை வசூலிக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும் மத்திய மாசு கட் டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்திருக்கும் விதிமுறைகள் படி அந்த நிறுவனம் ஏற் படுத்திய சூழல் பாதிப்புகளைக் கணக் கிட்டு அதற்குரிய தொகையை உத்தரவு பிறப்பித்த 15 நாட்களுக்குள் வசூலிக்க வேண்டும், சுற்றுப்புறச் சூழல் நிவா ரணத் தொகையை வழங்காவிட்டால் அந்நிறுவனத்தின் மீது மேல் நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி யது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் இறுதி வாரம் உத்தரவிட்ட நிலை யில், ஏ.ஜெ.நிட்ஸ் நிறுவனம் ஜனவரி 17 ஆம் தேதி வரைவோலை எடுத்து ரூ.9 லட்சத்து 37 ஆயிரத்து 500-ஐ தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, சுற் றுப்புறச் சூழல் நிவாரணத் தொகையாக அளித்தது. அத்துடன் சுற்றுச்சூழல் விதி முறைகளை முறையாக கடைப்பிடித்து நிறுவனத்தை இயக்குவோம் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை சிறுவர்கள் உட்பட நால்வர் கைது
கோவை, பிப்.15- பள்ளி மாணவர்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்த னர். பொள்ளாச்சி அருகே 2 பள்ளி மாணவிகளையும், ஒரு பள்ளி மாணவனையும் 4 சிறுவர்களும், 18 வயது இளைஞர் ஒருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 3 சிறுவர் களையும், இளைஞரையும் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் வெள்ளியன்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்துள் ளனர். சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்வதை செல் போன்களில் வீடியோ பதிவு செய்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 2 பள்ளி மாணவிக ளும், ஒரு பள்ளி மாணவனும் பாதிக்கப்பட்டனர். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 4 சிறுவர்களும், 18 வயதான இளைஞரும் கடந்த சில மாதங்களாக கிராமப் பகுதிகளில் உள்ள ஒதுக்குப்புறமான இடங்களில் வைத்து பலமுறை மாணவ, மாணவியரை பாலியல் வன்கொடுமை செய்துள் ளனர். 4 சிறுவர்களும், கூலி வேலை செய்யும் இளைஞரும் பெரும்பாலும் செல்போனில் ஆபாசப் படங்களை பார்த்து வந்துள்ளனர். மேலும், அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை பாலியல் வன்கொடுமை செய்ய முள் செடிகளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை காலை அவர்களின் பெற் றோருக்கு தெரியவந்தது. இருப்பினும், அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க விரும்பவில்லை. கிராம மக்கள் சைல்ட் லைன் உதவி எண்ணுக்கு (1098) தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். சைல்ட் லைன் ஒருங்கிணைப்பாளரின் புகாரின் அடிப்படையில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் 4 சிறுவர்கள் மற்றும் இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இளைஞர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற 3 சிறுவர்களும் கோவையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு சிறுவனைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.
பெண்ணின் மார்பில் பாய்ந்த கத்தி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!
பெண்ணின் மார்பில் பாய்ந்த கத்தி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்! சேலம், பிப்.15- பெண்ணின் மார்பில் பாய்ந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்களுக்கு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்மையில் தருமபுரி மாவட்டம், ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண்ணின் முதுகில், அவரது கணவர் கத்தி யால் குத்தினார். அருகிலிருந்தவர்கள் அப்பெண்ணை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்து எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில், கத்தியானது இடதுபுற நெஞ்சுப் பகுதியில் ஆழ மாக உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். கத்தியை அறுவை சிகிச்சை மூலம் எடுக்க சேலம் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். தொடா்ந்து, அப் பெண்ணுக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சையில், இடதுபுற நெஞ்சுப்பகுதியில் பாய்ந்த கத்தி இதயத்துக்கும், முக்கிய மான ரத்த குழாய்க்கும் மிக அருகில் சிக்கலான இடத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் கத்தியை வெளியே எடுத்து, ரத்த கசிவை சரிசெய்தனர். தற்போது அவர் நலமுடன் உள்ளார். இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற் கொண்ட இருதய மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை மருத் துவக் குழுவுக்கு பாராட்டுகள், என்றார்.
தெருநாய்கள் கடித்தால் இழப்பீடு ஈஸ்வரன் எம்எல்ஏ பேட்டி
ஈரோடு, பிப். 15- தெருநாய்கள் கடித்தால் மறுநாளே இழப்பீடு வழங்க வேண்டும் என ஈஸ்வரன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள் ளார். ஈரோட்டில் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ செய்தியாளர்களி டம் பேசுகையில், கடந்த 6 மாதங்களாக தெருநாய்கள் ஆடுகளைக் கடிக்கின்ற நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் தெருநாய்களைக் கட்டுப்படுத்துகின்ற விசயத்திலோ, இழப்பீடு வழங்க வேண்டிய விசயத்திலோ முனைப்பு காட்டவில்லை என்பது வேதனையளிக்கிறது. ஆடு களை மட்டுமல்ல, குழந்தைகளையும், தெருவில் செல்லும் பெண்களையும் தெருநாய்கள் துரத்தி கடித்ததைப் பார்த்தோம். இதனைக் கட்டுப்படுத்தவில்லையெனில் தெரு வில் யாரும் நடக்க முடியாத சூழல் உருவாகும். எனவே தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தெருநாய்கள் கடித்தால் அடுத்தநாளே இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என் றார்.
போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தல்
போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தல் தருமபுரி, பிப்.15- பேருந்து பயணிகளை மிரட்டும், தருமபுரி போக்குவ ரத்துக் கழக உதவி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும், என பயணிகள் வலியுறுத்த்தியுள்ளனர். தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் தகவல் மற்றும் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. பயணிகளுக்கு பேருந்துகள் வருகை மற்றும் புறப்பாடு குறித்த தகவல்களை தெரிவிப்பது உள் ளிட்ட சேவைகள் இங்கு வழங்கப்படுகிறது. இங்கு பணியில் உள்ள போக்குவரத்து கழக புறநகர் பேருந்து நிலைய உதவி மேலாளர் கதிரேசன் என்பவர், பயணிகள் தகவல் கேட்கும் போது, அவர்களிடம் உரிய தகவல்களை தெரிவிக்காமல் அவ மரியாதையாக பேசுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்ற னர். இதனால் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் பேருந்து கள் வருகை மற்றும் புறப்பாடு உள்ளிட்ட தகவல்களை கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாமல் அவதிப்படுவது மட்டு மல்லாமல், இத்தகைய ஊழியர்களால் அவமானப்படுத் தப்படுகின்றனர். மேற்கண்ட அலுவலர் கதிரேசன் மீது அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சிபிஎஸ்இ தேர்வு துவக்கம்
சிபிஎஸ்இ தேர்வு துவக்கம் கோவை, பிப்.15- கோவையில் சிபிஎஸ்இ தேர்வில் பல்லாயிரக்கணக் கான மாணவர்கள் எழுதி னர். இந்தியா முழுவதும் சனி யன்று சிபிஎஸ்இ தேர்வுகள் துவங்கியது. கோவை மாவட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மாணவ, மாணவி யர் ஆர்வத்துடன் முதல் நாள் தேர்வினை எழுதினர். கோவை மாவட்டத்தில் உள்ள 157 மையங்களில் 518 பள்ளிகளைச் சேர்ந்த 39,433 பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினர். இதே போல 122 தேர்வு மையங்களில் 363 பள்ளிகளைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் 35,999 மாண வர்களும் தேர்வு எழுதினர். பத்தாம் வகுப்பு மாண வர்களுக்கு சனிக்கிழமை முதல் மார்ச் 18 ஆம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, சனிக் கிழமை முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே இருக்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டுள்ளனர். 10.30 மணிக்கு தேர்வுகள் துவங்கி யது. மாணவர்கள் உற்சாகத் துடன் தேர்வினை எழுதி னர்.