districts

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை: பாம்பு கடித்த முதியவரை தொட்டில் மூலம் தூக்கிச்சென்ற அவலம்

தருமபுரி, நவ.19- பென்னாகரம் அருகே அடிப் படை வசதிகள் எதுவும் இல்லாத தால், பாம்பு கடித்த முதியவரை தொட்டில் மூலம் தூக்கிச்சென்ற அவ லம் அரங்கேறியுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னா கரம் அருகே உள்ள வட்டவன ஹள்ளி ஊராட்சியில் ஏரிமலை, கோட் டூர் மலை, அலகட்டு மலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த 3  மலை கிராமங்களில் 200க்கும் மேற் பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வரு கின்றனர். அடர்ந்த மலை கிராமத் தில், மலை மீது உள்ள இந்த 3 கிரா மங்களுக்கும் போதிய சாலை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப் படை வசதிகள் எதுவுமில்லை. இத னால் மலைவாழ் மக்கள் அத்தியாவ சிய தேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு சுமார் 7 கி.மீ. தூரம் நடந்தே செல்ல வேண்டும். இந்நிலை யில், ஞாயிறன்று அலகட்டு கிரா மத்தைச் சேர்ந்த சித்தபெலான் (75) என்ற முதியவர், விவசாய நிலை யத்தில் வேலை செய்து கொண்டி ருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக, முதியவரை பாம்பு கடித் துள்ளது. இதனைத்தொடர்ந்து வீட் டிற்கு வந்த முதியவர் பாம்பு கடித் ததை தெரிவித்துள்ளார். இதைய டுத்து மருத்துவமனைக்கு செல்ல  போக்குவரத்து வசதி இல்லாத நிலை யில், மூங்கிலில் போர்வையால், தூளி கட்டியுள்ளனர். அப்பொழுது பாம் பின் விஷம் உடலில் பரவாமல் இருக்க முதியவருக்கு பாம்பு கடித்த இடத் தில், சுண்ணாம்பு வைத்துக் கொண்டி ருந்தார். தொடர்ந்து, தூளி கட்டிய பிறகு, முதியவரை அமர வைத்து உறவினர்கள் எடுத்து சென்றனர். தொடர்ந்து மலை இறங்கிய பிறகு, அடிவாரத்திலிருந்து இருசக் கர வாகனத்தின் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அழைத்து சென்றனர். சாலை வசதி வேண்டி, மலைவாழ் மக்கள் போராடி வரும் நிலையில், இன்னும் சாலை வசதி கிடைக்காமல் அவதிப் பட்டு வருகின்றனர். இதனால் மருத் துவ சேவைக்கு செல்ல தூளி கட்டி  எடுத்துச் செல்லும் அவலம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.