கோவை, டிச.29- தோழர்கள் போராட்டங்களி னால் பல மாற்றங்களை நிகழ்த்தி யுள்ளனர். விட்னஸ் படத்தை இளை ஞர்கள் கொண்டாடவும், விவாதிக் கவும் வேண்டும் என கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் திரைக்கலைஞர் ரோகிணி உரையாற்றினார். விட்னஸ் திரைப்படக்குழு விற்கு முற்போக்கு அமைப்புகள் சார்பில் கோவை ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி அரங் கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் - கலை ஞர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தி.மணி தலைமை வகித் தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் இரா.ஆறுச் சாமி வரவேற்புரையாற்றினார். இதில், தபெதிக பொதுச்செய லாளர் கு.இராமகிருட்டிணன், ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் இரவிக்குமார் மற்றும் திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி ஆகியோர் கருத்துரை யாற்றினர்.
கடவுளே செய்தாலும் நடவடிக்கை
இதில், கு.இராமகிருட்டிணன் பேசுகையில், தமிழ் சினிமாவில் ஒரு பெண் கதாநாயகியாக பெண் ணியம் பேசும் படமாக கூட இல்லாமல் ஒரு புதிய கதைக்களத் தில் கோரிக்கைக்காக போராடுகிற போராளியாக காட்டப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களில் மிகவும் ஒடுக்கப்படுபவர்கள் பெண்கள் தான். தற்போது புதுக்கோட்டை யில் நடைபெற்ற தீன்டாமை கொடு மைகளுக்கு மாவட்ட ஆட்சியர் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற் கத்தக்கது. சாமியாடிய பெண்ணை சிறையில் அடைத்தது அல்ல, கடவுளே வந்து தீண்டாமை கொடு மையில் ஈடுபட்டாலும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்தியாவில் எத்த னையோ நவீன வசதிகள் இருந் தாலும் தொழில்நுட்ப வசதிகள் உலகம் முழுவதும் கண்டுபிடிக் கப்பட்டாலும் இங்குள்ள இந்துத் துவ, சாதி அமைப்பினர் இதை பாது காத்து வருகின்றனர், என்றார்.
விவாத பொருளாக மாற்ற வேண்டும்
இதையடுத்து விட்னஸ் படத்தின் நடிகரும், தமுஎகச மாநில துணைத்தலைவருமான திரைக் கலைஞர் ரோகிணி பேசுகையில், இந்த படத்தின் கதாபாத்திரத்தின் பெயராக என்னை இந்திராணி என அழைப்பது மகிழ்ச்சி அளிக் கிறது. இதற்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் நிறைய நடை பெற்றுள்ளது. ஆனால், இப்போது தான் விவாத பொருளாக மாறி யுள்ளது; இதனை நாங்கள் எதிர்ப் பார்த்தோம் என்றாலும், இது மிகப் பெரிய அளவில் விவாதத்தை உரு வாக்கியுள்ளது என்பது எதிர் பாராதது. இப்போது நாம் அனை வரின் முன்பு உள்ள கேள்வி இந்த அவலத்திற்கு எப்படி முடிவு கட்டப் போகிறோம் என்பதில் இருக்கிறது. இந்தியாவில் அதிகப்படியான மலக்குழி மரணங்கள் ஏற்படுகிறது. ஆனால், அது தமிழகத்தில்தான் வழக்காக பதிவு செய்யப்படு கிறது. விட்னஸ் படத்தினை இளை ஞர்கள் கொண்டாட வேண்டும். இதை விவாதப்பொருளாக மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் இந்திராணி போன்ற தாய்மார் களின் போராட்டங்கள் வெற்றிய டையும். இந்த அமைப்பு முறை பெரிய மாற்றத்தை நோக்கி நகரும். தோழர்கள் போராட்டங்களினால் பல மாற்றங்களை நிகழ்த்தி யுள்ளனர். இதுபோன்ற மலக்குழி கட்டமைப்பு முறைகளில் பெரிய நகரங்களில் மாற்றியமைக்கப் பட்டுள்ளது. அதுபோல இங்கும் மாற வேண்டும்; சட்டமாக உரு வாக்கப்பட வேண்டும், என்றார். இதையடுத்து விட்னஸ் படத் தின் இயக்குநர் தீபக் பேசுகையில், படத்தின் கதை வடிவமைக்கப்பட்ட இடம் கோவை என்றும், இதன் ஆக்கம் அரசின் பார்வைக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டு மானால் இதை சென்னையில் நடந்தவாறு எடுப்பது தான் பொறுத் தமாக இருக்கும். எனவே தான் அங்கு எடுக்கப்பட்டுள்ளது. கதை பல போரட்டங்களை வழிநடத்தி செல்லுகின்ற கருப்பொருளாக மாற வேண்டும் என என்னினோம், என்றார். இதன்பின் திரைக்கதை ஆசிரியர் ஜே.முத்துவேல் கூறு கையில், கதையின்படி திரைப் படம் அன்றாட தூய்மை பணியாளர் களின் கஷ்டங்களை கூறியுள்ளது. படத்தை காண வருபவர்கள் முகம் சுழிக்காதவாறு காட்சிகள் அமைக் கப்பட்டுள்ளது. இந்த கதை அம் சத்தை திரையில் காணவே யோசிக் கின்ற பெரும் சமூக அமைப்பு முறையில், தொழிலாளர்களின் கடி னங்கள் புரிய வேண்டி அவர்களும் காண திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது, என்றார். நிறைவாக, அழகன் கருப்பண்ணன் நன்றி கூறி னார். இந்நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.