districts

img

ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி தொடர் போராட்டம்: அதிகாரிகள் உறுதியளித்ததால் வாபஸ்

அவிநாசி, பிப். 21 - அவிநாசி அருகே மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி    நடைபெற்ற போராட்டத்தில், அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து தேவேந்தர் நகர் பகுதி மக்கள் திங்களன்று போராட் டத்தை வாபஸ் பெற்றனர். சேவூர் ஊராட்சிக்குட்பட்ட, தேவேந்தர் நகர் பகுதி மக்கள்  பயன்படுத்தும், மயானம் சேவூர் கைகாட்டி பகுதியில் இருக்கி றது. இந்த மயானத்தை சுற்றியுள்ள சேவூர் கைகாட்டி ரவுண் டான பகுதியை, உணவகத்தினர், தேநீர் கடைக்காரர்கள் உள் ளிட்டோர் கழிவுகளைக் கொட்டி ஆக்கிரமித்து வருவதாக வும், இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கக்  கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு ஆய்வு செய்த அதிகாரிகள், தே வேந்தர் நகர் பகுதி மக்களுக்கு என மயானம் இல்லை. மயா னம் பொதுவாகத்தான் உள்ளது எனக் கூறினர். இதை ஏற்க  மறுத்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில்  ஈடுபட்டு  மயானம் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதைத்தொடர்ந்து, அதிகாரிகளுடன் திங்கள்கிழமை இரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட் டத்தை அப்பகுதி மக்கள் கைவிட்டனர்.