படகு இல்லத்திலுள்ள நடைபாதை திறக்கப்படுமா? என எதிர்பார்ப்பு
உதகை, ஜன.22- உதகை தேனிலவு படகு இல்லத்தில் அடைத்து வைக்கப் பட்டுள்ள நடைபாதை திறக்கப்படுமா? என சுற்றுலா பயணி கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். நீலகிரி மாவட்டம் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தல மாகும். இங்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற் றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் உதகை படகு இல்லம், தொட்ட பெட்டா மலை சிகரம், பைக்காரா படகு இல்லம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. உதகை படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகள் இயக்கப்பட்டு வரு கின்றன. இங்கு சீசன் காலங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதால், அவர்களது வசதிக்காக உதகை ஏரியின் மறுகரையோரத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ.83 லட்சம் செல வில் தேனிலவு படகு இல்லம் அமைக்கப்பட்டது. மேலும், தேனிலவு படகு இல்லத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக் கும் வகையில் பசுமை புல்வெளியுடன் கூடிய பூங்கா உள்ளது. சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், சுற்றுலா பய ணிகள் தங்களது வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங் களை நிறுத்த பார்க்கிங் வசதி, கழிப்பிட வசதி செய்து கொடுக் கப்பட்டு உள்ளது. இதேபோல், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் ரூ.45 லட்சம் மதிப்பில் தேனிலவு படகு இல்லம் 2019 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. இந்த தேனிலவு படகு இல்லம் வழி யாக படகில் சென்றுவிட்டு திரும்ப வரும்போது, நடந்து வரும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டு இருந்தது. அதாவது சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ளது போல் அலங்கார நடைபாதை அமைக்கப்பட்டதால் அந்த வழியாக நடந்து வர புதுமண தம்பதிகள் அதிக ஆர்வம் காட்டினர். ஆனால், தற் போது அந்த நடைபாதை முழுவதுமாக அடைத்து வைக்கப் பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் புதுமண தம்பதிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், இந்த தேனிலவு படகு இல்ல ஏரியின் கரையோரத்தில் உருவாக்கப் பட்ட அலங்கார நடைபாதையில் நடந்து இயற்கை அழகை கண்டு ரசிக்க பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருந்தது. ஆனால். தற்போது இந்த அலங்கார நடைபாதை முற்றிலும் உபயோகம் அற்று சுற்றுலா பயணிகளுக்கு தெரியாமல் இருக்கிறது. மாலை நேரங்களில் இந்த நடை பாதை முழு வதும் எரியும் அலங்கார விளக்குகள் சேதமடைந்துள்ளது. எனவே, இதை சுற்றுலாத்துறை உடனடியாக சீரமைத்து சுற் றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். முடிந்த வரை கோடை சீசனுக்குள் பூங்காவை மேம்படுத்தி சுற்றுலா பயணிகள் படகு சவாரி முடித்து, அந்த நடைபாதை வழியாக நடந்து வர ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும், என்றனர். இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், சுற்றுலா பயணிகள் நடந்து வரும் நடைபாதையில் காட்டெரு மைகள் நடமாட்டம் உள்ளது. அதனால் தற்காலிகமாக நடை பாதை அடைக்கப்பட்டுள்ளது. தற்போது சாகச சுற்றுலாவுக் கான வேலைகள் தொடங்கி இருப்பதால் அதன் ஒரு பகுதி யாக இந்த நடைபாதையையும் முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
தமிழ் சங்க செயலாளர் தேர்வு
திருப்பூர், ஜன. 22 - திருப்பூர் தமிழ் சங்கத் தின் செயலாளராக கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளரும், நொய்யல் பண்பாட்டு அமைப்பின் துணைத் தலை வருமான மோகன் கே.கார்த் திக் தேர்வு செய்யப்பட்டுள் ளார். திருப்பூர் தமிழ் சங்கத் தின் செயலாளராக பணி யாற்றி வந்த ஆடிட்டர் லோக நாதன் அண்மையில் காலமா னார். இதை அடுத்து தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக மோகன் கே.கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக மோகன் கார்த்திக் தேர்வு
திருப்பூர், ஜன. 22 - திருப்பூர் தமிழ் சங்கத்தின் செயலாளராக கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளரும், நொய்யல் பண்பாட்டு அமைப்பின் துணைத் தலைவருமான மோகன் கே கார்த்திக் தேர்வு செய் யப்பட்டுள்ளார். திருப்பூர் தமிழ் சங்கத்தின் செயலாளராக பணியாற்றி வந்த ஆடிட்டர் லோகநாதன் அண்மையில் காலமானார். இதை அடுத்து தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக மோகன் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குடியரசு தின விழா: கிராம சபைக் கூட்டம்
திருப்பூர், ஜன.22- குடியரசு தின விழாவை ஒட்டி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் வியாழனன்று (ஜனவரி 26) சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, குடியரசு தின விழாவை ஒட்டி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 265 கிராம ஊராட்சி களில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. இதில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம் மற்றும் திட்டப் பணிகள், கிராம ஊராட்சிகளின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், மக்கள் நிலை ஆய்வு, ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. இந்த கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவல கத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக தங்களது ஆலோசனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர் ஓய்வூதிய பணம் ரூ.8.78 லட்சம் அபகரிப்பு?
திருப்பூர், ஜன.22 - ஓய்வு பெற்ற போலீஸ் துணை ஆய்வாளர் வங்கி கணக்கில் இருந்து ரூ.8.78 லட்சம் ஓய்வூதிய பணபலன் கையாடல் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளார். திருப்பூர், சாமுண்டிபுரம், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (55). இவர் கடந்த 1993ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்து 2020ஆம் ஆண்டு சிறப்பு துணை ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி, பின்னர் விருப்ப ஓய்வு பெற்றார். இவர் பணியில் சேர்ந்ததில் இருந்து கடந்த 2010ம் ஆண்டு வரையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி மூலம் சம்பளம் பெற்றார். 2010ஆம் ஆண்டு ரயில்வே போலீசில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருப்பூர், ஊத்துக்குளி சாலையில் உள்ள ஆக்சிஸ் வங்கிக்கு இவரது சம்பள கணக்கு மாற்றப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு பணியில் இருந்த சமயம் சிவக் குமார் அந்த தனியார் வங்கியில் ரூ.3.50 லட்சம் வங்கி கடன் பெற்றார். அந்த கடனை தவணை முறையில் மாதா மாதம் செலுத்தி விட்டதாக சிவக்குமார் தெரிவித்தார். இவர் பணி ஓய்வு பெற்ற நிலையில் இவரது ஓய்வுக் கால பணப் பலன் என்ற அடிப்படையில் ரூ.8.81 லட்சம் அரசு கருவூ லத்தில் இருந்து, இவர் முதலில் கணக்கு வைத்திருந்த அரசுடைமை வங்கிக்கு அனுப்பி உள்ளனர். அதன் பிறகு இரண்டாவது தவணையாக ரூ.9.50 லட்சத்தை இவரது இரண்டாவது வங்கிக் கணக்கு உள்ள ஆக்சிஸ் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்று ஆக்ஸிஸ் வங்கியில் இவர் பெற்ற கடன் தொகை யில் ரூ.2.78 லட்சத்தை செலுத்தி கடனை முழுமையாக அடைத்து விட்டதாக சிவக்குமார் கூறினார். ஆனால் கடன் முழுமையாக அடைக்கப்பட்ட பின் னரும், போலி ரசீது மற்றும் போலி கையெழுத்து மூலமாக இவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.78 லட்சம் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும், அத்துடன் ஏடிஎம் மூலம் ரூ.6 லட்சம் வரை பணம் எடுக்கப்பட்டு உள்ள தாகவும் கூறினார். இது குறித்து ஆக்சிஸ் வங்கி நிர்வாகத்திடம் கேட்ட போது முறையாக பதிலளிக்கவில்லை என்று அவர் தெரி வித்தார். எனவே இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த நவம்பர் 21ஆம் தேதி மாநகர மத்திய குற்றப்பிரிவில் சிவக்குமார் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். எனினும் இது வரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்றும், இந்த மோசடி காரணமாக தனது மகளின் திருமணமும் நின்று விட்டதாகவும் சிவக்குமார் தெரி வித்தார். அதேசமயம் சிவக்குமார் புகார் அளித்த போதும், அவர் வங்கியில் கடன் கட்டியதற்கான ஆதாரங்களை அளிக்க வில்லை என்றும், வங்கியில் விசாரித்து வருவதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
அரசு பேருந்துகளை சுத்தம் செய்ய காட்டன் வேஸ்ட் கூட தராத நிர்வாகம்
திருப்பூர், ஜன.22 - திருப்பூர் அரசு பேருந்து பணி மனையில் தினமும் பேருந்துகளை சுத்தம் செய்வதற்கு காட்டன் வேஸ்ட் (பருத்தி கழிவுத் துணி) கூட தராத போக்குவரத்து கழக நிர்வாகத்தின் மீது தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பேருந்து பணிமனையில் ஊழி யர்களை அலட்சியப்படுத்தி பொறுப் பற்ற முறையில் நடந்து கொள்ளும் போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் வலியு றுத்துகின்றனர். இதுகுறித்து திருப்பூர் பணிமனை யில் வேலை செய்யும் போக்குவரத்து தொழிலாளர்கள் கூறியதாவது, அரசு போக்குவரத்து கழகம் திருப்பூர் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு சரா சரியாக 600 பேருந்துகள் இயக்கப் படுகின்றன. தினமும் காலை அனைத்து பேருந்துகளும் பராமரிக் கப்பட்டு பணிமனையில் இருந்து வெளியே வருகின்றன. பணிமனை யில் பேருந்துகளை சுத்தம் செய் வதற்கு ஓட்டுனருக்கு காட்டன் வேஸ்ட் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஓட்டுநர்களுக்கு காட்டன் வேஸ்ட் வழங்கப்படுவ தில்லை. அதனால் பயணிகளின் இருக்கையோ அல்லது ஓட்டுநர் அமரும் இடங்களிலோ சுத்தம் செய்ய இயலாத நிலை போக்கு வரத்து கழக பேருந்துகளில் தொடர் கிறது. இதனால் அரசு பேருந்துகளில் அதிகாலை நேரங்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது உடை களை வீணாக்க வேண்டியது உள்ளது. நாள்தோறும் அனைத்து பேருந்துகளையும் முறையாக பரா மரிக்க நாள் ஒன்றுக்கு 600 கிலோ காட்டன் வேஸ்ட் தேவைப்படுகிறது. ஆனால், பணிமனை ஊழியர் களுக்கு வழங்க வேண்டிய காட்டன் வேஸ்ட்டும், கை கழுவ சோப்பும் பல மாதங்களாக வழங்கப்பட வில்லை. காட்டன் வேஸ்ட் வழங்கப் படாததால் பணிமனை ஊழியர்கள் தங்கள் இல்லங்களில் உள்ள பழைய துணிகளை கொண்டும், பயணி களால் பேருந்துகளில் தவற விடப் படுகிற துணிகளைக் கொண்டும் மிகுந்த சிரமத்துடன் பேருந்துகளை பராமரித்து வருகிறார்கள். இத னால் கழகப் பேருந்துகளில் பயணி கள் தவறவிடப்பட்ட பொருட்கள் அவர்களுக்கு திரும்ப கிடைக் காமல் போவதற்கும் காரணமாக உள்ளது. கழக நிர்வாகத்திடம் காட்டன் வேஸ்ட் கேட்கும் பணி மனை ஊழியர்களை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். பேருந்துகளை பராமரிக்கத் தேவையான உதிரி பாகங்கள், டயர் டியூப், ஆயில், காட்டன் வேஸ்ட் எவ்வளவு தேவை என்பதை சரி யான விதத்தில் கணக்கெடுத்து கொள்முதல் செய்ய வேண்டிய போக்குவரத்து கழக அதிகாரிகள், பேருந்துவின் பராமரிப்பை அலட்சி யப்படுத்தி, பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். எனவே பேருந்துகளை முறையாக பரா மரிக்க முடிவதில்லை. இது போன்ற கழக அதிகாரிகளின் நடவடிக்கை அரசு போக்குவரத்து கழகத்திற் கும், அரசிற்கும் கெட்ட பெயரை உரு வாக்குகின்றது என்று தொழிலா ளர்கள் கூறினர். பொறுப்பற்ற அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக, அனைத்து தொழிலாளர்களும் ஒருங்கிணைத்து குரல் கொடுக்க வேண்டும் என சிஐடியு அரசு பேருந்து ஊழியர்கள் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உடுமலை அணைகளின் நிலவர
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:47.08/60அடி நீர்வரத்து:803கன அடி வெளியேற்றம்:233கன அடி அமராவதி அணை நீர்மட்டம்:79.06/90அடி. நீர்வரத்து:32கனஅடி வெளியேற்றம்:469கன அடி
பிப். 11 திருப்பூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூர், ஜன.22 - திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இளைஞர்களுக்கு தனியார் துறை மூலம் மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா பிப்ரவரி 11ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடத்தப்படுத்தப்படுகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாநக ராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை மாநக ராட்சி மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத் திலும் இந்த வேலை வாய்ப்பு முகாம் பிப்ரவரி 11ஆம் தேதி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடக்க உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 800-க்கும் மேற் பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுள்ள நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளது. இதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பெறும். இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங் கேற்க இளைஞர்கள் https://tirupurjobfar.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங் களை அறிந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் வேலை நிறுத்தத்தை விளக்கி இன்று ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஜன.22 - ஊதிய உயர்வு, புதிய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவது, வங்கிப் பணிகளில் காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30, 31 ஆகிய இரு நாட்கள் வங்கி கள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்ட கோரிக் கைகளை விளக்கி, வங்கி ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் திங்களன்று மாலை, திருப்பூர் டவுன்ஹால் எதிரில் நேரு வீதி சந்திப்பில் உள்ள யூனியன் வங்கி கிளை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப் படுகிறது. அதேபோல் வரும் 27 ஆம் தேதி அன்று மாலை குமரன் சாலையில் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் எதிரில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை முன்பா கவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்கங் கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் டி. மனோகரன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டி: ஆந்திரா அணியை வீழ்த்திய திருப்பூர் அணி
திருப்பூர், ஜன.22 - திருப்பூரில் நடைபெற்ற டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டியில் ஆந்திரா அணியை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றி பெற்றது. திருப்பூர்-முருகம்பாளையம் ஒயர்ஸ் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க்கில் திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் சார்பில் 16 வயதுக்கு உட் பட்டோருக்கான டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த 14ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இதில் ஆந்திரா, கர் நாடகா, கேரளா, புனே உள்ளிட்ட எட்டு அணி கள் கலந்து கொண்டிருந்தன. டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் திருப்பூர் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ஆந்திரா அணி 133 ரன்கள் எடுத்தது. அடுத்து விளை யாடிய திருப்பூரை சேர்ந்த திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் அணியினர் இலக்கை எட்டி போட்டியில் வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழா வில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சசாங் சாய், இந்தியன் கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவில் உள்ள சரத் ஸ்ரீதர், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கும், கலந்து கொண்ட மற்ற அணியினருக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
திருப்பூர், ஜன. 22 - திருப்பூர் வெங்கமேடு பகுதியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி திருப்பூர் மாரத்தான்-2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி திருப்பூர் மாரத்தான்-2023 போட்டியை சட்டமன்ற உறுப்பினர்கள் கே.என்.விஜயகுமார், எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப் பினர் கே.சுப்பராயன், திருப்பூர் மாநகர மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத் தனர். 3 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த மாரத்தான் நிகழ்ச்சி 4 பிரிவுகளாக நடைபெற்றது. 3 கிலோ மீட்டர் பிரி்வு, 18 வயதுக்குட்பட்டோர் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோர் தனித்தனி யாக பங்குபெறும் 5 கிலோ மீட்டர் பிரிவு, 10 கிலோ மீட்டர் பிரிவு என நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற அனை வருக்கும் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப் பட்டது.
வாலிபர்கள் மீது கொலை வெறி தாக்குதல்: 10 பேர் மீது வழக்குப்பதிவு
சேலம், ஜன.22- சேலத்தில் வழித்தட பிரச்சனை தொடர்பாக வாலி பர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாநகரம், புட்டாநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் நான்கு பேர் நின்று பேசிக் கொண்டி ருந்தனர். அப்போது ஆனந்த், பாதையை விட்டு ஓரமாக நின்று பேசுங்கள் என கூறியதற்கு, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம டைந்த 4 பேர் ஆனந்தை தாக்கியுள்ளார். இதையறிந்து அங்கே வந்த ஆனந்தின் சகோதரர் கார்த்திக் மற்றும் முரளி ஆகி யோரை, அந்த வாலிபர்கள் பயங்கர ஆயுதங்களால் கடுமை யாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த கார்த்தி மற்றும் முரளி சேலம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அம்மாபேட்டை காவல் துறையினர் கொலை வெறி தாக்குதல் நடத்திய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, இதுகுறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.
12 ஆம் மாணவன் தற்கொலை: போலீஸ் விசாரணை
ஈரோடு, ஜன.22- சென்னிமலை அருகே பெற்றோர் கண்டித்ததால் 12 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் தரணி (17), கொமரப்பா செங்குந்தர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், தரணி தனக்கு படிக்க விருப்பமில்லை என நின்று விட்டார். பெற்றோரின் அறிவுரையின்படி சக்தி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்துள்ளார். அங்கும் பள்ளிக்கு சரியாகச் செல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் ஜன.11 ஆம் தேதியன்று தரணி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டரில் சேர்க்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து ஜன.19 ஆம் தேதியன்று கோவை கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், தரணி சிகிக்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து சென்னிமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஔவையார் பெயரில் பல்கலைக்கழகம் சமூக இலக்கிய பேரவை வலியுறுத்தல்
சேலம், ஜன.22- தமிழ் மூதாட்டி ஔவையார் பெயரில் தமிழ்நாட்டில் பல் கலைக்கழகம் அமைக்க வேண்டும் என தேசிய சமூக இலக் கிய பேரவை தலைவர் தாரை அ.குமரவேல் வலியுறுத்தி உள்ளார். தேசிய சமூக இலக்கியப் பேரவையின் சார்பில், தமிழ் மூதாட்டி ஔவையாரின் ஆண்டு விழா சேலம் உத்தமசோழ புரம் கரபுரநாதர் கோவிலில் நடைபெற்றது. தேசிய சமூக இலக்கிய பேரவையின் மாநிலத் தலைவரும், சேலம் பெரி யார் பல்கலைக்கழக தமிழ்துறை பாடத்திட்ட வல்லுநர்க்குழு உறுப்பினருமான தாரை அ.குமரவேல், அங்குள்ள தமிழ் மூதாட்டி ஔவையார் சிலைக்கு மாலை அணிவித்து, மரி யாதை செலுத்தினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற பெயரால் 3 பெண் பாற் புலவர்கள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்ற னர். அதியமானுக்கும், தொண்டைமானுக்கும் நடக்கவிருந்த போரை தூது சென்று போர் நடக்காமல் ஔவையார் சமாதா னம் செய்து வைத்துள்ளார். அறம் செய்ய விரும்பு என எளிய நடையில் அறக்கருத்துக்களையும் கூறியுள்ளார். சங்க காலத் தில் இருந்து ஔவையார் என்ற பெயரில் வாழ்ந்த பெண்பாற் புலவர்கள் அறத்தையும், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், கல்வியின் பெருமையையும் உலகிற்கு பாடல் மூலம் எளிய நடையில் எடுத்து சொல்லி மக்களை பண்படுத்தி வந்தி ருக்கின்றனர். திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் போன்ற புலவர் பெருமக்களின் பெயரால் பல்கலைக்கழகங்கள் இருப்ப தைப்போல பெண்பாற் புலவரான ஔவையாரின் பெயரிலும் ஒரு பல்கலைக்கழகத்தினை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும், என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் அமைப் பின் நிர்வாகிகள் என்.ஏ.சிவலிங்கம், ப.திருமுருகன் உட்பட இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.