districts

img

அடையாளத்தை இழக்கும் முன் ஆட்சியாளர்களின் ஆதரவுக்கரம் நீளுமா

  நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம், குமராபாளையத்தில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  விசைத்தறிகள் இயங்கி வருகிறது.  இந்த தொழிலை நம்பி நேரடியா கவும், மறைமுகமாகவும் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர்.பள்ளி பாளையம், குமராபாளையம் வட்டா ரத்தில் வெள்ளை பீஸ் எனப்படும் காடா துணி, லுங்கி, எக்ஸ்போர்ட் ஜவுளி ரகங்கள், தமிழக அரசின் இலவச வேட்டி சேலை, துண்டு, பாலிஸ்டர் லுங்கி, வெள்ளை வேட்டி,  சேலை ரகம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஜவுளி துணிகள் உற்பத்தி  செய்யக்கூடிய இடமாக பள்ளி பாளையம், குமாரபாளையம் பகுதி யாகும்.  இங்கு உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஜவுளிகளும் வெளி மாவட் டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங் கள் அதிகம் ஏற்றுமதியாகி வருகிறது. குறிப்பாக பள்ளிபாளையம், குமரா பாளையத்தில் உற்பத்தியாகும் லுங்கிகள் பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகளின் பெயர்களை தாங்கி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகி வருகிறது. அந்த வகையில்,  80 சத மான விசைத்தறி தொழிலை மையப் படுத்தி வர்த்தகம் நடைபெறுகிறது. சமீப காலங்களில் பள்ளிப்பாளையம்,  குமாரபாளையம் பகுதிகளில் உள்ள  பழைய இரும்பு கடைகளில் அதிக ளவில் விசைத்தறிகள் எடைக்கு வருவது, விசைத்தறி தொழிலை சார்ந்து இருப்பவர்களுக்கும், சமூக  ஆர்வலர்களுக்கும் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து பள்ளிபாளையம் பிரதான சாலையில் உள்ள இரும்பு கடையின் உரிமையாளரிடம்  கேட்ட போது, முன் எப்போதும் இல்லாத  வகையில் கடந்த ஆறு மாதங்க ளாகவே அதிகளவில் விசைத்தறிகள் பழைய இரும்பு கடைக்கு எடைக்கு வருகிறது. குறிப்பாக, 40 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய விசைத்தறிகள் அதிகளவு  கொண்டு வரப்படுகிறது. அதிகபட்சமாக கோவை மாவட்டம்,  சோமனூர் உள்ளிட்ட பகுதியி லிருந்து கூட அதிகளவு விசைத்தறி கள் பள்ளிபாளைத்தில் உள்ள பழைய  இரும்பு கடைக்கு எடைக்கு போடுவ தற்காக லாரிகள் மூலமாக கொண்டு வரப்படுவதாக தெரிவித்தார். மேலும், அதிநவீன விசைத்தறி களின் வருகை, நூல்  விலை ஏற்றம்,  சாய கழிவு நீர் பிரச்சனை, தொழி லாளர் பற்றாகுறையால் தொழிலை நடத்த முடியாத சூழ்நிலை, ஜிஎஸ்டி  வரி விதிப்பு, பணமதிப்பு இழப்பு நடவ டிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணி களால் விசைத்தறி தொழிலை நடத்த  முடியாததால் விசைத்தறிகள் எடைக்கு போடப்படுவதாக தெரிவித் தார். 

இதுகுறித்து பள்ளிபாளையத்தில் உள்ள விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கேட்ட பொழுது, ஆள்  பாதி - ஆடை பாதி என்பார்கள், அந்த  பழமொழிக்கு ஏற்றால் போல மனிதனின் மானத்தை காக்கும் ஜவுளி  துணி உற்பத்தி செய்யும் விசைத் தறி தொழிலாளர்களின் வாழ்வு மிக  மோசமான சூழலுக்கு தள்ளப்பட் டுள்ளது. தொடர்ந்து விலைவாசி உயர் வால், போதிய  வருமானம் விசைத்தறி  தொழிலில் இல்லாத காரணத்தி னால், ஏராளமான விசைத்தறி தொழி லாளர்கள் மாற்று தொழிலுக்கு செல்கின்றனர். விசைத்தறி தொழி லில் பணிபுரிய அடுத்த தலைமுறை இளைஞர்கள் தயாராக இல்லாத நிலை. இதனால் விசைத்தறி தொழில்  பாதிப்பை சந்தித்து வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகளின் தவறான  பொருளாதார நடவடிக்கையின் காரணமாக, விசைத்தறி தொழி லாளர்கள் மீதும், விசைத்தறி ஜவுளி தொழிலின் மீது அதிகாரிகளின் உரிய  கவனம் இல்லாத நிலை இருப்பதால்  தொடர்ந்து விசைத்தறி ஜவுளி தொழில் நசிந்து கொண்டே வரு கிறது. அதே நேரத்தில் பள்ளி்பாை யத்தில் பெருமுதலாளிகளால் அதி களவு அதிநவீன ஆட்டோ லும்  எனப்படும் தானியங்கி விசைத் தறிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 10 நபர்கள் செய்யக்கூடிய பணி யை ஒரு ஆட்டோ லும் விசைத்தறி செய்து விடும் என்பதால் ஆள்  தேவை  குறைந்து வருகிறது. இதனால் விசைத்தறி தொழில் சரிவை சந்தித்து  வருகிறது. மேலும், தொழிலை நடத்த முடியாதவர்கள் விசைத்தறிகளை விற்றாலும் வாங்குவதற்கு யாரும் முன் வருவதில்லை. விசைத்தறி உரிமையாளர்கள், விசைத்தறிகளை இரும்பு கடையில் எடைக்கு போடு வது அதிகரித்து வருவதாக தெரிவித் தனர். 

எனவே ஒன்றிய, மாநில அரசுகள்  தொடர்ந்து விசைத்தறி தொழிலா ளர்கள் மற்றும் விசைத்தறி ஜவுளி தொழிலில் மீது உரிய கவனம் செலுத்த வேண்டும். விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் விசைத்தறி தொழில் தற்போது அடையாளத்தை  இழந்து வருகிறது. ஆட்சியாளர் களின் ஆதரவு கரங்கள் நீளும்போது தான் விசைத்தறி ஜவுளி தொழில்  காப்பாற்றப்படும் என ஆதங்கத்துடன்  தெரிவித்தனர்.  -மா.பிரபாகரன்.