districts

img

மரத்தடி வகுப்பு, திறந்தவெளி கிணறு, பாதுகாப்பற்ற அரசு பள்ளியின் அவலம் களையப்படுமா?

இளம்பிள்ளை, பிப்.13- இளம்பிள்ளை ஒன்றியத்துக்குட்பட்ட ரெட்டிமணியக்காரனூரில் அரசு ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், மாணவர் கள், ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர். சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியத் துக்குட்பட்ட ரெட்டிமணியக்காரனூரில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் எல்கேஜி முதல் 8 ஆம் வகுப்பு  வரை தமிழ்  மற்றும் ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கப் படுகிறது மேலும், எல்கேஜி முதல் யுகேஜி  வரை மட்டும் 60க்கும் மேற்பட்ட குழந்தை கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் தமிழ் மற் றும் ஆங்கில கல்வியில் கொரோனா கால னத்திற்கு முன்பு  250க்கும் மேற்பட்ட மாண வர்கள் இருந்தனர். தமிழகத்தில்  கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட  நிலையில், தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் தனியார் பள்ளியில் கல்விக்  கட்டணம் செலுத்த முடியாமல், அரசு பள்ளி யில் சேர்க்க ஆர்வம் காட்டினர். இதன்  விளைவாக தற்பொழுது இந்த பள்ளியில், ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி கல்வியில்  சுமார் 450க்கும் மேற்பட்ட  குழந்தைகள்,  மாணவ, மாணவியர்கள்கல்வி பயின்று வருகின்றனர்.

திறந்த வெளியில் வகுப்பறை

இந்நிலையில், இப்பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிட வசதி இல்லாததால் மாணவர்கள் அங்குள்ள மரத்தடி மற்றும் பள்ளி அருகே உள்ள கோவில் என திறந்த வெளியில் கல்வி கற்பிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் கல்வி கற்கும் திறன் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மழை, வெயில் காலத்தில் மாணவர்களை அமர வைக்க  இடம் இல்லாமல் ஆசிரியர்கள் சிரமத்துக் குள்ளாகி வருகின்றனர். இப்பள்ளியில் 9  வகுப்பறை கட்டிடம் உள்ளது.  அதில்,  தற்போது 5 வகுப்பறை மட்டுமே நல்ல நிலை யில் உள்ளது.  1968 ஆம் ஆண்டு ஆரம்பப் பள்ளி யாக இருந்தபோது கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இந்த வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்து தற்பொழுது கல்வி  பயின்று வருகின்றனர். இதனால் மாணவர் கள் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது. தற்போது உள்ள மாணவர்கள் எண்ணிக்கை யைக் கணக்கிட்டால், உடனடியாக 4 கட்டி டங்களும், மொத்தம் 8 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டிய நிலை உள் ளது.

முறையிட்டும் பலனில்லை

இப்பள்ளியில் சுற்றுச்சுவர்  இல்லாமல் உள்ளதால், சமூக விரோதிகளின் கூடார மாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போதிய கழிப்பிட வசதியும் இல்லாததால் மாணவர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். மேலும், தண்ணீர் இல்லாமல் உள்ள திறந்த வெளி கிணறு எவ்வித பாதுகாப்பும் இல்லா மல் உள்ளதால் எந்நேரமும் விபத்து ஏற்ப டும் நிலை உருவாகியுள்ளது. அதேபோல் ஆசிரியர்களுக்கும் ஓய்வறை கிடையாது. இதுதொடர்பாக வீரபாண்டி ஒன்றிய வட் டார அலுவலர், சட்ட மன்ற உறுப்பினர், வட் டார, மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பள்ளியின் பெற்றோர் ஆசிரி யர் குழு சார்பாகவும், கிராமமக்கள் சார்பில் கூடுதல் வகுப்பறை கேட்டு மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் பள் ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு  ஆய்வு செய்து சென்றுள்ளனர். அதன்பின்  இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி பொதுமக்கள் குற் றஞ்சாட்டுகின்றனர். எனவே, இதுகுறித்து சேலம் மாவட்ட  கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு  சென்று கூடுதல் வகுப்பறை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. -தியாகு இளம்பிள்ளை