districts

பீக்அவர் மின் கட்டணம் குறைக்கப்படுமா?

கோவை மாவட்டத்தில் எண்ணற்ற குறு மற்றும் சிறு தொழில்கள் இயங்கி வருகின்றன. இந்த தொழில்களை லட் சக்கணக்கான தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இந்நிலையில்,  கோவையில் உள்ள சிறுகுறுந்தொழில் கள் மின்கட்டண உயர்வால் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. குறிப்பாக ஜாப் ஆர்டர்கள் மற்றும் உதி ரிபாகங்கள் செய்து கொடுக்கும் தொழில் முனைவோர்கள், செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர்.  இது குறித்து தமிழ்நாடு கைத்தொ ழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜேம்ஸ்  கூறும்போது, மின்சார நிலை கட்டணம்  என்பது பயன்படுத்துவதற்கான கட்டணம் கிடையாது. மாதாந்திர  வாடகை என்ற அடிப்படையிலேயே நிலை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகி றது. மின்சாரத்தை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் மாதம் தோறும் நிலைக் கட்டணத்தை கட்டா யமாக செலுத்த வேண்டிய சூழலில் சிறு குறு தொழில் முனைவோர் இருந்து வரு கின்றனர். 112 கிலோ வாட் மின் இணைப்பு பெற்றிருந்தால் மாதம் தோறும் சுமார் 16 ஆயிரம் ரூபாய் முதல்  17,500 ரூபாய் வரை நிலை கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. நிலை கட்ட ணம் 430 சதவீதத்திலிருந்து 450 சதவீ தம் வரை கடுமையாக அதிகரிக்கப் பட்டிருக்கிறது. 50 சதவிகிதம் உயர்வு  என்ற ரீதியில் நிலை கட்டணத்தை சிறு குறு தொழில் முனைவோரால் தாக்குப்  பிடிக்க இயலும். உயர்த்தப்பட்ட நிலை கட்டணத்தை ரத்து செய்யக்கோரி தொழில் அமைப்புகள் சார்பில் தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம். வெறும் 8 சதவீதம் கூட லாபம் இல்லாமல் இயங்கி கொண்டு இருக்கும் குறுந்தொழில்கள் இந்த நிலை கட்டண உயர்வால், தாங்க முடி யாத சுமையில் உள்ளனர். பல்வேறு தொழில் முனைவோர்கள் தொழில் செய்ய முடியாத அளவிற்கு நெருக் கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ள னர். குறு,சிறு தொழில்களை பாதுகாக்க  112 கிலோ வாட் வரை ஏற்கனவே இருந் தது போல் நிலை கட்டண உயர்வை திரும்பப்பெற்று கிலோவாட்டுக்கு 35  ரூபாயாக குறைத்து குறு சிறு தொழில் களை தாங்கள் பாதுகாக்க நடவடிக்கை  எடுப்பதோடு, பீக்ஹவர் கட்டணத்தை யும் திரும்ப பெற வேண்டுகிறோம். எவ் விதமான கணக்கிடும் மீட்டர்கள் இல் லாத நிலையில் குறுந்தொழில் முனை வோர்கள் மொத்தமாக பயன்படுத்தும் மின்சார அளவை கணக்கிட்டு அதில்  8 மணிநேரத்துக்கு பீக்ஹவர் கட்டண மாக 15 சதவீதம் கூடுதலாக மின்கட்ட ணத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளப் பட்டு உள்ளோம். தற்போது கடும் தொழில் நெருக் கடி இருந்து வரும் நிலையில் இந்த பீக்அவர் கட்டணத்தை திரும்ப பெற்று  குறு, சிறு தொழில்களை பாதுகாக்க தமி ழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். கடந்த ஜூலை மாதம் முதல் 18 கிலோ  வாட்டுக்கு கீழ் மின் இணைப்பு பெற்றவர் களுக்கு மின் பயன்பாட்டில் சேதாரம்  என்ற அடிப்படையில் குறுந்தொழில்  முனைவோர்கள் மீது பல்லாயிரக்கணக் கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட் டுள்ளது.  மின்சார வாரியத்தின் இந்த நட வடிக்கை குறுந்தொழில்களை நடத்து வதற்கு சாத்தியமற்ற சூழலை உரு வாக்கியிருக்கிறது. இந்த அபராத நடவ டிக்கையால் குறுந்தொழில்கள் மற்றும்  குடிசை தொழில்கள் முடங்கியுள்ளன. பயன்பாட்டில் மின் சேதாரம் தொடர்பாக குறுந்தொழில் முனைவோருக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தி அபராதம் விதிக்க  3 அல்லது 4 மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். குறுந் தொழில்களுக்கு உதவ வேண்டும் என்ற  நோக்கத்தில் தமிழக அரசு 12 கிலோ  வாட்டுக்கு கீழ் மின் இணைப்பு பெற்றவர் களுக்கு சில சலுகைகளுடன் 3B-ல் இருந்து 3A1-னுக்கு மாற்றி அரசாணை பிறப்பித்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் மின்சார வாரி யம் கட்டண மாற்றங்களை செய்யாமல்  இழுத்தடித்து வருகிறது. இதில் தமிழக  அரசின் அரசாணையை நடைமுறைப்ப டுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட துறை  அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல முதலீட்டு மானியத்தை  பொருத்தவரை பெரு நிறுவனங்கள் எளி தில் மானியம் பெற்று விடுகின்றனர். ஆனால் குறுந்தொழில் முனைவோர் மானியத்தில் இயந்திரங்களை வாங்க மாவட்ட தொழில் மையத்தில் பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. ஆவணங்கள் உட்பட பல்வேறு விதிகளை தளர்த்தி எளிமைப்படுத்தினால் மட்டுமே சிறு குறுந்தொழில் முனைவோர் எளிதில் முதலீட்டு மானியம் பெற இயலும். முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிக ளில் பங்கேற்பதற்காக  கோவை வர வுள்ள நிலையில் அவரை சந்தித்து சிறு  குறு தொழில் முனைவோரின் பிரச்சனை களை தெரிவிக்க நேரம் கேட்க உள் ளோம் என தெரிவித்தார்.