நல்லிணக்கம் நீடிக்குமா?
வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நல்லிணக் கம் ஏற்பட்டு வந்த நிலையில், அதில் குழப்பத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. தென் கொரியாவை மையமாகக் கொண்டு செயல்படுகிற வடகொரிய எதிர்ப்பா ளர்கள் சில நாட்களுக்கு முன்பு, வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை இழிவுபடுத்தும் விதமாக பிரசுரங்கள் தயாரித்து வடகொரியாவுக்குள் அனுப்பியுள்ளனர். இதை வன்மையா கக் கண்டித்துள்ள வடகொரிய அரசு, தென்கொரியா இதுபோன்ற நடவடிக் கைகளை தடுக்காவிட்டால் தொடர்பு களை துண்டித்துக் கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளது. இரு அரசுக ளுக்கும் இடையிலான ஹாட்லைன் தொடர்பையும் துண்டித்துள்ளது. இந் நிலையில் இத்தகைய முடிவுகளுக்கு செல்ல வேண்டாம் என்று தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாஷிங்டன்
டிரம்ப் பிடிவாதம்
கோவிட் 19 வைரஸ், சீனா வின் வுகான் நகரில் தான் உருவாக்கப்பட்டது என்ற தனது கருத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொ னால்டு டிரம்ப் இன்னும் பிடிவாதமாக நிற்கிறார். இந்தக் கருத்தை உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச அறிவியல் அறிஞர்கள், மருத்துவ விஞ்ஞானிகள் முற்றாக நிராகரித்து விட்டபோதிலும், சீனா மீது மீண்டும் வசை பாடியுள்ள டிரம்ப், சீனா மீது இது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மீண்டும் கூறியுள்ளார்.
வாஷிங்டன்
சிறந்த மருந்து தானா?
கோவிட் 19 வைரசுக்கு எதி ரான செயல்பாட்டில் ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்து வெற்றிகரமானது அல்ல என்று அமெ ரிக்காவிலேயே உறுதிசெய்யப் பட்டுள்ள போதிலும் கூட மீண்டும் மீண்டும் அந்த மருந்தின் புகழைப் பரப்பு வதில் டொனால்டு டிரம்ப் பிடிவாதம் காட்டி வருகிறார். இந்நிலையில் இந்த மருந்தை அவசரநிலையில் பயன் படுத்தலாம் என அளிக்கப்பட்ட அங்கீ காரத்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ரத்து செய்துள்ளது. இதனால் எரிச்சல டைந்துள்ள டிரம்ப் ஹைட்ராக்சி குளோ ரோகுயின், கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரு சிறந்த மருந்து என சான்றிதழ் கொடுத்துள்ளார்.
வெலிங்டன்
மீண்டும் பரவுகிறது
நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நிலையை எட்டி சில நாட்கள் ஆகி யுள்ள நிலையில், மீண்டும் இரண்டு பேருக்கு கோவிட் 19 தொற்று ஏற் பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் சமீபத்தில் பிரிட்டனிலிருந்து நியூசிலாந்து வந்தவர்கள். ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இப்படி பலரும் வெளிநாடுகளிலிருந்து வரக் கூடும்; அவர்கள் மூலமாக தொற்று பரவக்கூடும்; எனினும் அதை திறம்பட எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம் என்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.
பாங்காக்
நிம்மதி பெருமூச்சு
தாய்லாந்தில் கடந்த 21 நாட்க ளாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. முன்னதாக இரண்டு மாதம் காலம் அந்நாடு முழுமையான ஊர டங்கின் கீழ் இருந்தது. இந்நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்த அனை வரும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொ டர்ந்து அங்கு ஊரடங்கு தளர்த்தப் பட்டுள்ளது.