districts

img

வன ஒப்பந்ததாரர்களை மட்டும் அனுமதிப்பதா?

மேட்டுப்பாளையம், ஜூன் 28- இயற்கை சீற்றத்தால் வனத்திற் குள் சரிந்த காட்டு மரங்கள் மற்றும் கடத்தல்காரர்களிடம் பிடிபட்ட மரங் களை வனத்துறையினர் ஏலம் விட்ட னர். இதில், பதிவு செய்யப்பட்ட வன ஒப்பந்ததாரர்கள் மட்டுமே ஏலத் திற்கு அனுமதிக்கப்பட்டதால் சல சலப்பு ஏற்பட்டது. வனப்பகுதியில் வீசும் பலத்த  காற்று, கனமழையால் ஏற்படும் மண் சரிவுகள் போன்ற இயற்கை சீற்றத் தால் சரிந்து விழும் வயது முதிர்ந்த தேக்கு, ஈட்டி போன்ற விலை உயர்ந்த காட்டு மரங்கள் மற்றும் மரக்கடத்த லின் போது பிடிபட்ட மரங்களை செவ்வாயன்று வனத்துறை ஏலம் மூலம் விற்பனை செய்தது.  கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் வனச் சரகத்தில் வனத்துறைக்கு சொந்த மான மரக்கிடங்கு உள்ளது. அர சுக்கு சொந்தமான இம்மரக்கிடங் கில், அடர்ந்த வனப்பகுதிக்குள் கன மழையால் ஏற்படும் மண்சரிவுகள்  மற்றும் பலத்த காற்று காரணமாக  சாய்ந்து விழும் தேக்கு, ஈட்டி போன்ற மரங்கள் வனத்துறையால் அப் புறப்படுத்தப்பட்டு இங்கு பாதுகாக் கப்படும். மேலும், மரக்கடத்தலில் ஈடுபடுவோர் பிடிபட்டு அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் மரங்களும் வழக்கு முடியும் வரை இங்கு இருப்பு வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், வனத்தையொட் டிய பகுதியில் ஆண்டுக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இம்மரங் களை கரையான் உள்ளிட்ட பூச்சி களின் தாக்குதல் காரணமாக யாருக்கும் பயனின்றி வீணாகும் சூழல் உருவாகும். இதனால், குறிப் பிட்ட கால இடைவெளியில் தமிழக அரசின் அனுமதி பெற்று  இவற்றை  ஏலம் மூலம் வனத்துறை விற்பனை  செய்யும். இதன்படி, மேட்டுப்பா ளையம் அரசு மரக்கிடங்கில் இருப் பில் இருந்த விலை உயர்ந்த மரங்க ளாக கருதப்படும், தேக்கு மற்றும் ஈட்டி மரங்கள் இன்று ஏலம் விடப் பட்டது. வனத்துறையால் நடத்தப் பட்ட இந்த மர ஏலத்தில் ஏற்க னவே பதிவு பெற்ற 17 வன ஒப்பந் ததாரர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு மரத்தின் நீளம் மற்றும் சுற்றளவின் அடிப்படையில் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டு மரங்கள் ஏலம் விடப்பட்டது.  கோவை வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் தினேஷ்குமார், மேட்டுப்பாளையம் வனச்சரக அலு வலர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த  ஏலத்தில் 59 குவியல் மரங்கள் சுமார் ரூபாய் 10 லட்சம் வரை ஏலம் போன தாக தெரிகிறது. ஏலம் நடைபெற்ற போது தங்களுக்கு தகவல் ஏதும்  தெரிவிக்கப்படாமல், ஒரு சிலரை மட்டும் அனுமதித்து ஏலம் நடத் தப்படுவதாக கூறி உள்ளூரைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மர வியா பாரிகள் வனத்துறையினரிடம் ஏதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த ஏலத்தை மற்றொரு தேதி யில் நடத்த வலியுறுத்தினர். இவர் களிடம் பேச்சுவார்த்தையில் ஈடு பட்ட வனத்துறையினர், ஏற்கனவே வனத்துறை அலுவகத்தில் முறைப் படி தங்களை பதிவு செய்து  கொண்ட வன ஒப்பந்ததாரர்க ளுக்கு மட்டுமே ஏலம் குறித்த தக வல் தெரிவிக்கப்படும் இவர்கள் மட்டுமே வனத்துறை சட்டப்படி  ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கபடு வார்கள் என்பதை தெரிவித்தனர்.  நீங்களும் முறைப்படி பதிவு செய்து கொண்டால் அடுத்த முறை ஏலத்தில் பங்கேற்கலாம் என கூறப் பட்டதையடுத்து எதிர்ப்பு தெரிவித்த வர்கள் அனைவரும் கலைந்து சென் றனர். இதனால் வனத்துறை ஏலத் தின் போது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.