உடுமலை, பிப்.26- உணவு, தண்ணீருக்காக அல்லல் படும் வனவிலங்குகளுக்கு குடிநீர் தொட்டிகள் அமைக்க வேண்டுமென சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனசர கங்கள் அமைந்துள்ளன. இப்பகுதி அரிய வகை வனச்சூழல் மண்டலமாக உள்ளது. இந்த மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வறட்சி யும், வெயிலின் தாக்கமும் அதிகரித் துள்ளது. இதனால் உணவு மற்றும் குடிநீருக்காக வன உயிரினங்கள் இடம் பெயர்ந்து வருகின்றன. 2 வனச்சரகங் களிலும் காட்டாறுகள், ஓடைகளின் குறுக்கே 50-க்கும் மேற்பட்ட தடுப்ப ணைகள் உள்ளன. ஆனாலும் சில இடங்களில் மட்டுமே தண்ணீர் இருப்ப தாகவும், பெரும்பாலான தடுப்ப ணைகள் வறண்டு காணப்படுவதாக வும் கூறப்படுகிறது. இது குறித்து சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், உடுமலை-மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைப் பகுதிக்கு யானைகள், காட்டு மாடுகள், மான் கூட்டமாக செல்கின்றன. இத னால், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மக்கள், சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அவ் வழியாக சென்று வருகின்றனர். உடுமலை அமராவதி வனச்சர கத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வன எல்லை கிராமங்க ளுக்கும் கோடை காலத்தில் யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகள், குடிநீர், உணவுதேடி வரும் போது வழி தவறி குடியிருப்பு அல்லது விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற் படுத்தும் சம்பவங்களும் நடந்து வரு கின்றன. இது குறித்து வனத்துறை யினர் ஆய்வு செய்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.