districts

அதிக கட்டணம் வசூல்: பேருந்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?

நாமக்கல், ஜூன் 19- அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூல் செய் யப்பட்ட நிலையில், பேருந்தின் உரி மத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என  நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்  அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி யைச் சேர்ந்தவர் பாரதிவாணன் (41). இவர் கடந்தாண்டு மார்ச் மாதம், சேலம்  மாவட்டம், கந்தம்பட்டி பேருந்து நிறுத் தத்திலிருந்து சேலம் புதிய பேருந்து  நிலையம் செல்வதற்காக, எஸ்ஆர் பிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தனி யார் பேருந்தில் ஏறியுள்ளார். நடத்து நரிடம் 10 ரூபாயை கொடுத்து பயணச் சீட்டு கேட்டபோது, நடத்துநர் ரூ.10க் கான பார்சல் கட்டண சீட்டை வழங்கி யுள்ளார். கந்தம்பட்டியில் இருந்து  சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் ரூ.7க்கு  பதிலாக ரூ.10 ஏன் வசூல் செய்கிறீர்கள்?  என்றும், மீதம் ரூ.3யை தருமாறும் பாரதி வாணன் நடத்துநரிடம் கேட்டுள்ளார். ஆனால், நடத்துநர் பயணியிடம் தரக்கு றைவாக பதில் அளித்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பார திவாணன் சேலம் மேற்கு வட்டார  போக்குவரத்து அலுவலரிடம் நடத்து னர் மீதும், பேருந்து உரிமையாளர் மீதும்  புகார் செய்துள்ளார். வட்டாரப் போக்கு வரத்து அலுவலரின் விசாரணையில், அரசு நிர்ணயத்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக பயண கட்டணம் வசூலித் தது தெரியவந்துள்ளது. வட்டாரப் போக் குவரத்து அலுவலரின் உத்தரவுப்படி பேருந்து உரிமையாளர் ரூ.3யை வரை வோலை மூலமாக பயணிக்கு அனுப்பி  வைத்துள்ளார். பேருந்து நிர்வாகமும் நடத்துநரும்,  அரசு கட்டணத்தைவிட கூடுதலாக பணத்தை வசூலித்ததற்காகவும், சரி யான நடவடிக்கையை போக்குவரத்து அலுவலர் எடுக்காததற்காகவும் சம்பந் தப்பட்ட பயணி நாமக்கல் மாவட்ட  நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு  நவம்பர் மாதம் வழக்கு தாக்கல் செய்தி ருந்தார். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்ற நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகியோர் தீர்ப்பு வழங்கி னர். அதில், கூடுதலாக ரூ.3 கட்டணம்  வசூலித்ததற்கு இழப்பீடாக ரூ.1000 மும், வழக்கு செலவுத்தொகையாக ரூ. 1000மும், வழக்கு தாக்கல் செய்தவ ருக்கு பேருந்தின் உரிமையாளர் நான்கு  வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என  உத்தரவிடப்பட்டது. மேலும், பேருந்து உரிமையாளர்  இரண்டு வார காலத்திற்குள் மாவட்ட  நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆஜராகி,  வரும் காலங்களில் அரசு நிர்ணயித் துள்ள கட்டணத்தைவிட கூடுதல் தொகையை பயணிகளிடம் வசூலிக்க மாட்டோம் என உறுதிமொழியை வழங்க வேண்டும். நிரூபிக்கப்பட்ட நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கு காரணமாக ஏன் பேருந்து வழித்தட உரி மத்தை ரத்து செய்யக்கூடாது? என்ப தற்கு சரியான முகாந்திரத்தை வழங்க  வேண்டும் என்றும், இதனை செய்ய  தவறினால் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு பேருந்து வழித்தட உரி மத்தை ரத்து செய்ய உத்தரவிடப்படும்  என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வட் டாரப் போக்குவரத்து அலுவலர் நுகர் வோர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக் கும் போது, சம்பந்தப்பட்ட நடத்துநரின் உரிமத்தை ஒரு மாதம் இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது என்று தெரிவித்துள்ளார். ஆனால், பயணி  கொடுத்த புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து அவ ருக்கு அனுப்பிய பதிலில் நடத்துநரின் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படவில்லை. நீதிமன்றத்திலும் இடைநீக்கத்திற்கான உத்தரவு நகல் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, வட்டார போக்குவரத்து அலுவலர் இரண்டு வார காலத்திற்குள் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆஜராகி, சம்பந்தப்பட்ட நடத்துநர் உரிமத்தை இடைநீக்கம் செய்ததற்கான ஆணை யின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். தவ றினால் நீதிமன்றத்தில் உண்மைக்கு புறம்பான சாட்சியத்தை வழங்கியதாக சேலம் வட்டாரப் போக்குவரத்து அலு வலர் (மேற்கு) மீது நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரி விக்கப்பட்டுள்ளது.