திருப்பூர், அக்.9- உடுமலையில் ஊரக வேலை திட்டத்தில் கடந்த இரண்டு மாதமாக ஊதியம் வழங்காதது ஏன் என்று ஊராட்சி ஒன்றியக்குழு கூட் டத்தில் கேள்வி எழுப்பப்பட் டது. உடுமலை ஊராட்சி ஒன்றி யக்குழுவின் கூட்டம் திங்கட் கிழமை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி பகுதியில் செயல்படும் ஒன்றிய பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு குடிநீர் மற்றும் சமையலறைகளை மேம்படுத்த கூடு தல் நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. மேலும் இந்த கூட்டத்தில் ஒன்றிய நிதி யில் நடைபெறும் வேலைகளை ஆய்வு செய்ய வரும்போது அதிகாரிகள் அப்பகுதி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தருவது இல்லை என்றும், ஒன்றிய பகுதி முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப் பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வேலைத் திட்டத்தில் கடந்த இரண்டு மாதம் ஊதியம் வழங்காதது ஏன் என்றும், ஊதியம் வழங்காமல் இருப்பதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்க வேண்டும். மேலும் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருப்ப தால் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.அனைத்து பகுதிகளி லும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலு வலர் ஜோதிமணி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட ஒன் றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.