இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் கோவை மாவட்ட தலைவர் எஸ்.ஸ்டாலின் குமார், செயலாளர் கே.எஸ்.கனகராஜ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கோவை மாநகரில் நூற்றுக்கணக்கான இளை ஞர்கள் உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இத்தொழிலில் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு பல கோடி ரூபாய்களை இலாபமாக ஈட்டி வருகின்றனர். ஆனால் இத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் பணிப்பாதுகாப்பு, சட்டபூர்வ உரி மைகள் எதுவும் இல்லாமல் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் கோவை பீளமேடு பன்மால் அருகில் போக்குவரத்து விதி மீறிய தனி யார் பள்ளி வாகன ஓட்டுநரை செயலை தவறு என சுட்டிக்காட்டிய உணவு வழங்கும் நிறுவ னத்தை சேர்ந்த இளைஞர் மீது போக்குவரத்து காவ லர் தாக்கிய வன்மையான கண்டனத்திற்கு உரியது. வலியோருக்கு பாதுகாவலராக , எளியோருக்கு எதிரியாக செயல்படும் போக்கு சரியானது அல்ல. போக்குவரத்து காவலரின் செயல் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். வேலையின்மை கொடுமையால், சட்டபூர்வ உரிமைகள் அற்ற பணி யில் வேறு வழி இல்லாமல் பணியாற்றி வரும் இளைஞர்கள் மீது அதிகார போதையின் உச்சத்தில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல், கண்ணியமான வாழ்க்கை வாழ அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி யுள்ள உரிமையை பறிப்பதாகும். இத்தகைய செயல்கள் காவல்துறையின் கண்ணியத்தையும் பொதுமக்கள் மத்தியில் குறைத்திடும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எனவே, கோவை மாநகர காவல்துறை, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடத்தில் இளைஞரை அவமானப்படுத்தியதற்கு ஈடாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இத் தகைய மனித உரிமை மீறல்களுக்கு எதிராக, ஜனநாயக பூர்வ வழிமுறையில் கோவையில் உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ள இளை ஞர்கள் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, ஜூன் 4- ஒரு பெண் மீது மோதி நிற்கா மல் சென்ற தனியார் பள்ளி வாக னத்தை மறித்து நியாயம் கேட்ட இளைஞரை, போக்குவரத்து காவலர் ஒருவர் சரமாரியாக தாக் கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் ஸ்விகி நிறுவனத்தில் உணவு விநியோ கிக்கும் பணியை செய்து வருகி றார். இவர் வெள்ளியன்று மாலை பீளமேடு அருகே இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பன்மால் அருகே நேச னல் மாடல் தனியார் பள்ளி வாகன மொன்று ஒரு பெண்ணை இடித்து விபத்து ஏற்படுத்தி விட்டு வேக மாக சென்றுள்ளதாக தெரிகிறது. இதனை கண்ட மோகனசுந்தரம் தனியார் பள்ளி வாகனத்தை பின்தொடர்ந்து சென்று வாக னத்தை நிறுத்தி நியாயம் கேட்டுள்ளார். அப்போது அங்கே வந்த போக்குவரத்து காவலர் ஒருவர் நியாயம் கேட்க நீ யார் என கன்னத்தில் மாறிமாறி அறைந் துள்ளார். இந்த சம்பவம் தொடர் பான வீடியோ சமூக வலைத்தளத் தில் வைரலானது.
இதனிடையே பாதிக்கப்பட்ட இளைஞர் சனி யன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து காவலர் மீது புகார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகை யில், பீளமேடு பன்மால் சிக்னல் பகுதியில் தனியார் பள்ளி வாக னம் ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றது. நான் அந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தி ஓட்டுநரிடம் பெண்ணை இடித்தது குறித்து கேட்டு கொண்டிருந்தேன். அப்போது அங்குவந்த போக்கு வரத்து காவலர் ஒருவர், இதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம் நீ யார், பள்ளி வாகனம் யாருது தெரியுமா? என கேட்டு கன்னத் தில் திரும்பதிரும்ப அறைந்தார். மேலும், பள்ளி வாகன ஓட்டு நரை உடனடியாக அனுப்பி வைத்து விட்டு தன்னிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு சிறிது நேரம் எண்ணை நிற்க வைத்து மனஉழைச்சலை ஏற்ப டுத்தி பிறகு அனுப்பினார். விபத் தில் பாதிக்கப்பட்ட பெண்ணை யும் அனுப்பிவிட்டார். விபத்து ஏற்படுத்தி விட்டு எந்த வருத்தமும் தெரிவிக்காமல் செல் கிறாரே என்கிற ஆதங்கத்தில் சம் பந்தப்பட்ட தனியார் பள்ளி வாகன ஓட்டுநரை நிறுத்தி கேள்வி கேட்ட தற்காக, தவறை செய்த ஓட்டு நரை அனுப்பிவிட்டு நியாயம் கேட்ட தன்னை காவலர் தாக்கி யது நியாயமற்றது. ஆகவே, காவல்துறை அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள் ளதாக தெரிவித்தார். இந்நிலை யில், சம்மந்தப்பட்ட லாவலரை பணியிடை மாற்றம் செய்து உத்தர விட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.