சேலம், ஜூன் 24- குத்தகை விவசாயிகளுக்கு அவகாசம் வழங்காமல் வீட்டினுள் இருந்த பொருட்களை அகற்றிய வருவாத்துறையின் நடவடிக் கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்ட னம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் ஒன்றி யம், எட்டிக்குட்டப்பட்டி ஊராட்சிக் குட்பட்ட செக்காரப்பட்டியில் ஓம லூர் வேலாசாமி செட்டியார் பள்ளி அறக்கட்டளைக்கு சொந்தமான 47 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் குத் தகை விவசாயிகள் நூறு ஆண்டுக ளுக்கு மேலாக சாகுபடி செய்து வரு கின்றனர். அந்நிலங்களை பள்ளி யின் அறக்கட்டளை குத்தகை விவ சாயிகளுக்கு தெரியாமல் 2006 ஆம் ஆண்டு விற்றுள்ளது. இதை எதிர்த் தும், பள்ளி அறக்கட்டளை சொந்த மான நிலம் பள்ளி வளர்ச்சிக்கே பயன்பட வேண்டும் என்றும், கடந்த 2006 ஆண்டு முதல் குத்தகை விவசா யிகள் ஓமலூர், திருச்சி, சேலம், சென்னை என வருவாய் மற்றும் உரி மையியல் நீதிமன்றங்களில் குத் தகை விவசாயிகள் போராடி வரு கின்றனர். இதற்டையே நிலம் வாங் கிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் அந்த நிலங்களில் உள்ள விவசாய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும் என தொடுத்த வழக்கை கடந்த ஆண்டு நவ.8 ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. மேலும், விவசாயிகள் வேண்டுமெனில், முறையீடு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள் ளது. அதன்படி உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் முறையீடு செய்த மனு நிலுவையில் உள்ளது. இந்நிலை யில் ஓமலூர் வட்டாட்சியர், விவசாய ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். நீதிமன்ற உத்தரவு வரும் வரை விவசாய ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாதென மாவட்ட ஆட்சி யர் செ.கார்மேகத்திடம் குத்தகை விவசாயிகள் மனு அளித்தனர். மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர்கள் பாதிக்கப்பட்ட குத்தகை விவசாயிகளுடன் ஓம லூர் வட்டாட்சியரிடம் நேரில் பேசி யும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. விவசாயிகளின் குடியிருப்புகளை அப்புறப்படுத்தி, வீட்டிலிருந்த பொருட்களை வருவாய்த் துறை யினர் அகற்றியுள்ளனர்.
சிபிஎம் கண்டனம்
நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவ தற்கு முன்பாக விவசாயிகளை அகற்றி, அவர்களின் வீடுகளையும், பொருட்களையும் சேதப்படுத்தி வரு வாய்துறை மற்றும் காவல்துறை யினரின் அராஜக போக்கை கையா ளுகின்றனர். இது மிகுந்த கண்ட னத்திற்குரியது. எனவே, இப்பிரச் சனையில் மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு உரிய முறையில் தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் மேவை.சண்முகராஜா மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பி யுள்ளார்.