பொங்கல் பானைவைத்து அரிசிபோட்டு எப்போது பொங்கும் என்று குடும் பமே இல்லை... இல்லை.... பெண்கள் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் போது பால் ஊற்றி பொங்கலோ... பொங்கல்.... என்று குடும்பமே ( இப்போது ஆண்களும் சேர்ந்துகொள் வார்கள்) மகிழ்ச்சியால் பொங்கும் ஆனால் இந்த ஆண்டு இந்த மகிழ்ச்சி சந்தேகம்தான். சென்ற ஆண்டு கூடியிருந்து கொண்டாடியவர்களில் பலர் கொரோனாவுக்கு பலியாகியிருக்கலாம். அந்த நினைவுகள் மனதில் பொங்கி இனிப்பு கரிப்பாகும் குடும்பங்களும் இருக்கும். கொத்தாய் குடும்பத்தை அள்ளிக்கொடுத்துவிட்டு அவலத்தில் ஆழ்ந்த குடும் பங்களும் இருக்கும். இவர்களுக்கான வருத்தம் ஒருபக்கம் இருந்தாலும் அதனை ஏக்கப்பெருமூச் சால் ஆற்றிக்கொண்டே எதிர்கால நம்பிக்கையோடு பொங்கல் வைப்பதும் பூரிப்பதும் நல்லதுதானே!
பொங்கல் பொங்குவது மட்டுமல்ல பொது வாகவே பொங்குவது நல்லதுதான். தண்ணீரின் பொங்கல்தான் நீராவி என்ஜினைக் கண்டறிய ஜார்ஜ் ஸ்டீவன்சனுக்கு உதவியது. இந்தக் கண்டுபிடிப்பை மார்க்ஸ் பாராட்டினார், இது மக்கள் பயன்பாட்டுக்கு வந்தபின் மக்களிடம் ஏற்றத் தாழ்வைப் போக்க ரயில்வண்டி உதவியதை என்.எஸ்.கிருஷ்ணன் பாட லாகப் பாடினார். இதே தண்ணீர்ப் பொங்கலை மார்க்சியமும் பயன்படுத்தியுள்ளது. நிரப்பப்பட்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்தால் அது சூடேறுகிறது. வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க ஒரு கட்டத்தில் கொதிக்கி றது. இப்படித்தான் தொழிலாளர் வர்க்க ஆட்சி அமைய, சமூக மாற்றம் ஏற்பட சோஷலிசக் கருத்து, சிந்தனை மக்களிடம் மெல்ல மெல்லக் கொண்டு செல்லப்பட வேண்டும். இது அடுப்பில் வைக்கப் படும் தண்ணீர் போன்றது. சமூக அவலங்களை, ஏற்றத் தாழ்வுகளைக் காரண காரியங்களோடு தொடர்ந்து விளக்குவது; தீர்வை நோக்கி சிறியதும் பெரியதுமான போராட்டங்களை நடத்துவது; தொழிலாளர் வர்க்கத்திடம் போர்க்குணத்தைக் கூர்மையாக்குவது என்பதெல்லாம் தண்ணீரின் வெப்பத்தை அதிகரிப்பது போன்றது. இறுதியில் எழுச்சியாகவும் புரட்சியாகவும் வெடிப்பது தண்ணீர் கொதிப்பது போன்றது. இதை மார்க்சியம் அளவு மாற்றமும் குண மாற்றமும் என்று விளக்குகிறது. மகாகவி பாரதியார் ரஷ்யப் புரட்சியை இந்த அளவுமாற்றம் குணமாற்றத்தோடுதான் விளக்கு வார். “இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வன வாசம், செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்ந்த” போதுதான் குணமாற்றம் ஏற் பட்டது.ஆஹாவென்று எழுந்தது புரட்சி. இப்படிப் பட்ட பொங்கல் நல்லதுதானே! சிலம்பு திருடினான் என்ற குற்றச்சாட்டில் கோவலனைக் கொல்வதற்கு அரசன் ஆணை யிட்டுவிட்டான். கோவலனும் கொல்லப்பட்டான். என்னசெய்ய முடியும் என்று அழுது அரற்றுவ தோடு கண்ணகி போயிருந்தால் சிலப்பதிகாரம் ஏது?
பொங்கி எழுந்தாள் புறப்பட்டாள். தேரா மன்னா என்று ஒருமையில் விளித்து நீதியை நிலைநாட்டினாள். கண்ணகியின் கோபப் பொங்கல் காப்பியமானதல்லவா? இரண்டாம் நூற்றாண்டில் மட்டுமல்ல இந்த நூற்றாண்டிலும் அதிகாரத்தில் இருப்போர் சட்டம் இயற்றிவிட்டால் இயற்றியதுதான். நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டால் சொன்னதுதான். ஒன்றும் செய்யமுடியாது என்ற கற்பிதங்கள் உடைத்தெறி யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுக்கு எங்கேயும் போகவேண்டாம். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மக்களின் கலாச்சாரம் காக்கும் எழுச்சிப் பொங்கலை நாமே பார்த்திருக்கிறோம். இன்னொரு பொங்கல் தலைநகர் டில்லியையே கலக்கியது. மூன்று வேளாண் சட்டங்களில் காற்புள்ளியைக் கூட மாற்றமுடியாது என்ற ஆட்சியாளரின் இறுமாப்பை விவசாயிகளின் ஓராண்டுகால உறுதிப் பொங்கலும் போராட்டப் பொங்கலும் சுக்குநூறாக்கியது அல்லவா? கண்ணகியின் பொங்கல் மதுரையை எரித்தது; ஆனால் விவசாயிகளின் ஆவேசப்பொங்கல் ஆட்சியாளர்களின் ஆணவத்தை அழித்தது. போராளிகளிடம் மண்டியிடச் செய்தது. மதம் பிடித்தோர் இயற்றிய சட்டம் குப்பைக் கூடைக்குப் போனது. பானையில் பால் பொங்குவது மட்டுமல்ல உரி மைக்காகவும் நீதிக்காகவும் மக்கள் பொங்குவதும் நல்லதுதான்.