கோவை, ஜூலை 16- இலக்கியம் படிக்கும் மாணவர்கள் சிறந்த மனிதராக இருக்கவும் முடியும் என பொள் ளாச்சியில் நடைபெற்ற சிற்பி இலக்கிய விருது விழாவில், கவிஞர் நந்தலாலா உரை யாற்றினார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி என்ஜி எம் கல்லூரியில் செவ்வாயன்று சிற்பி இலக் கிய விருது வழங்கும் நிகழ்வு மருத்துவர் சி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலை மையில் நடைபெற்றது. முன்னதாக, இந்த நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் கவிஞர் சிற்பி யின் அறிவிலி மற்றும் சிற்பி மொழி பெயர்த்த உழவனின் பாடல் ஆகிய நூல்களை பேராசிரி யர் இ.பஞ்சாங்கம் வெளியிட பேராசிரியர் தி. பார்த்திபராஜா பெற்றுக்கொண்டார். இத னையடுத்து, 2023 மற்றும் 2024 ஆண்டுக ளுக்கான விருதினை கவிஞர்கள் அம்ச பிரியா, பூபாலன் ஆகியோருக்கு வழங்கப் பட்டது.
2024 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது கவிஞர்கள் நா.வே.அருள், அமுத பாரதி, பிருந்தா சாரதி, கோ.வசந்தகுமாரன், புன்னகை பூ ஜெயக்குமார் உள்ளிட்டோ ருக்கும் பதிப்பில் விருது ராம.குருமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விருது பெற்ற வர்களை கவிஞர் நந்தலாலா வாழ்த்தி பேசு கையில், படித்து பட்டம் பெற்று உயர்ந்த பத வியில் அமரும் ஒருவர், இலக்கியத்தை படித் தவராக இருந்தால் கடமை தவறாத நேர்மை யாளராக இருப்பார். கல்லூரிகளில் என்ன படித்தாலும் இலக்கியம் படிக்கும் மாணவர் கள் சிறந்த மனிதராக இருக்கவும் முடியும். உலகின் மூத்த மொழியான தமிழை பாது காத்து வந்தவர்கள் விவசாயிகள் மற்றும் படைப்பாளிகள் இலக்கியம் சிறந்த மனிதர் களை உருவாக்கும் என்றார். முடிவில், கிருங்கை சேதுபதி நன்றி கூறினார்.