ஈரோடு, பிப்.25- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திங்களன்று (நாளை) நடை பெற உள்ளது. இடைத்தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்ற னர். இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்கு பதிவு எந் திரங்கள், தலா ஒரு கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்பட உள் ளது. பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து ஏற் பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள் ளன. வாக்குச்சாவடி மையங்களில் கழிப் பறை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளது. இதேபோல் மாற்றுத்திறனாளி கள் வாக்களிக்கும் வசதியாக சாய்வு தளம், அவர்களுக்கு வீல் சேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஈரோட்டில் காலையில் பனியின் தாக்கம் இருந்தாலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கிறது.
வீடியோ மூலம் கண்காணிப்பு
வெயிலின் தாக்கம் இடைத்தேர்தலில் எதி ரொலிக்கக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வாக்குசாவடி மையங்கள் முன்பும் பந்தல் கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ் வொரு வாக்குச்சாவடி மையங்களை சுற்றி அரசியல் கட்சியினருக்கு தடைவிதித்து 100 மீட்டர் தொலைவில் கோடு போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இப்பகுதிக்குள் வெளி நபர்கள் வரக்கூடாது என்பதற்காக கோடு போடப்பட்டு வருகிறது. 33 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை என கண் டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு முழுவது மாக கண்காணிக்கப்படுகிறது. இதேபோல் 238 வாக்குச்சாவடி மையங்களிலும் வீடியோ மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படு கிறது. இதுதவிர நுண்பார்வையாளர்களும் வாக்குப்பதிவை கண்காணிக்க நியமிக்கப் பட்டுள்ளனர்.
மதுக்கடைகளுக்கு தொடர் விடுமுறை
பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் அனைத்து வசதிகளும், நடவடிக்கைகளும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இடைத்தேர் தல் நடைபெறும் இத்தொகுதியில் 100க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் செயல்பட்டு வரு கின்றன. தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சனியன்று (நேற்று) முதல் தொடர்ந்து 3 நாட்கள், அதா வது வரும் வாக்குப்பதிவு நாளன்று வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் இயங்கும் மதுக் கடைகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. அதேபோன்று வாக்கு எண் ணிக்கை நடைபெறும் மார்ச் 2 ஆம் தேதி மட்டும் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கு விடு முறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட் களில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத் துள்ளார்.
இறுதிகட்ட பிரச்சாரம் ஓய்ந்தது
நான்கு முனை போட்டி நிலவும் இந்த இடைத்தேர்தலில் தங்களது கட்சி மற்றும் கூட் டணி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு பல் வேறு கட்சி தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியை முற்றுகையிட்டு, வாக்குசேக ரிப்பில் ஈடுபட்டு வந்தனர். பிரச்சார இறுதி நாளான சனியன்று (நேற்று) காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின், அதிமுக வேட்ளாபர் தென்னரசுவை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பிரச்சாரம் செய்யும் நாள் (சனியன்று) நிறை வடைந்த நிலையில், அத்தொகுதியிலிருந்து வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் வெளியேற துவங்கியுள்ளனர். அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் நடத் தும் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.