districts

img

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருப்பூர், டிச.9- மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில்  வெள்ளியன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி களை மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததா வது: மாற்றுத்திறனாளி நலத்துறையின்  சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். மாற்றுத் திறனாளிகள் சமுதாயத்தில் ஒரு அங்க மாக அனைவரும் ஏற்கவும், சமுதாய  வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளும்  பங்கேற்பதற்கு சம வாய்ப்புகளை ஏற்ப டுத்தித் தருவதற்கும். அவர்களின் முழு பங்கேற்பை உறுதி செய்வதற்கும் உரிய விழிப்புணர்வை இவ்வரசு ஏற்ப டுத்தி வருகிறது. சமுதாயத்தில் ஒவ் வொரு நடவடிக்கையிலும் சமமாக ஈடு படுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு முழுவதுமாக உதவும் வகையில் தமிழக  அரசு அவர்களுக்கென பல கொள்கை களை வகுத்தும், திட்டங்களைத் தீட்டி யும் அமல்படுத்தி வருகிறது. ஏனைய  மக்களுக்கு இணையாக மாற்றுத்திற னாளிகள் வாழ உறுதி செய்ய வேண்டு மென அரசால் பல திட்டங்கள் அறி விக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்  இன்றைய தினம் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைதீர்கும் நாள்  கூட்டத்தில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.31,200 மதிப்பீட்டில் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு 79 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள் ளது. மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.  இக்கூட்டத்தில் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அம்பா யிரநாதன், மாற்றுத்திறனாளி நல அலு வலர் முருகேசன், கண் மருத்துவர் தேவ சேனா, எலும்பு முறிவு மருத்துவர் யுகேஸ்வரன், மனநல மருத்துவர் சஞ் சய், நரபியல் மருத்துவர் சிவக்குமார், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ரகுராம் மற்றும் துறை சார்ந்த அலு வலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.