கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களை வரவேற்கும் விதமாக இனிப்புகள் மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டது. இதில், முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் பவானி நகர மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், கவுன்சிலர்கள் கோகிலாம்பாள், ராஜ்குமார், திலகவதி, சரவணன், ரஷ்யா பேகம், பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.