districts

img

சுதந்திர போராட்ட வீரர்களின் வாகன ஊர்திக்கு வரவேற்பு

அவிநாசி ஜன.29- அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சா லையில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாகன ஊர்திக்கு வெள்ளியன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்திய தலைநகர் தில்லியில் வரு டம்தோறும் குடியரசு தினத்தன்று அனைத்து மாநிலங்களின் பாரம்பரிய கலைகள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகள் வைக்கப்பட்ட வாகன ஊர்தி அணிவகுப்பு நடை பெறுவது வழக்கம். இந்நிலையில், தமி ழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட  வீரர்கள் வ.உ.சிதம்பரனார், பாரதி யார், வேலுநாச்சியார், திருப்பூர் கும ரன் உள்ளிட்டோர் அடங்கிய வாகன ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஊர்தி ஒன்றிய அர சால் நிராகரிக்கப்பட்டது .  இதனைத் தொடர்ந்து ஒன்றிய அர சால் நிகாகரிக்கப்பட்ட தமிழக அரசின் சுதந்திர போராட்ட வீரர்களின் வாகன ஊர்தி சென்னையில் நடைபெற்ற குடி யரசு தின விழாவில் பங்கேற்றது. இதை யடுத்து பொதுமக்களின் பார்வைக் காக கோவைக்கு அனுப்பி வைக்கப் பட்ட அந்த வாகன ஊர்திக்கு அவிநாசி  அருகே தேசிய நெடுஞ்சாலையில் உற் சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நி கழ்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.