தருமபுரி, மார்ச் 8- நடந்து சென்றே கல்வி கற்று வந்த மாணாக்கர்களின் பல நாள் கனவு புதனன்று நிறைவேறியது. அரூர் அருகே கிரா மத்திற்குள் வந்த பேருந்தை ஊர்மக்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். தருமபுரி - அரூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வழியில் உள்ள கோபிநாதம்பட்டி கூட்டுரோடு சாலையிலி ருந்து போளையம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மாரப்ப நாயக்கன்பட்டி, போளையம்பள்ளி, பொம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு பிர தான தொழில் விவசாயம் மட்டுமே. காய்கறி, பூ, கீரை போன்றவை இங்கு பயிரிடப்பட்டு உள்ளன. இந்த கிரா மங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லுாரி செல்ல, கோபி நாதம்பட்டி கூட்டு ரோடு பகுதிகளுக்கு தான் செல்ல வேண் டும். அதுமட்டுமின்றி குறிப்பாக 11 மற்றும் 12 வகுப்பு படிக்கக் கூடிய மாணவ, மாணவிகள் சுமார் 4 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள ஆர்.கோபிநாதம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தினமும் நடந்தே சென்று படித்து வந்தனர். இத னால் தங்களது வீட்டிலிருந்து காலை 7.30 மணிக்குள் புறப்பட வேண்டியுள்ளதால், சில வீடுகளில் காலையில் உணவு சமைப் பதற்கு காலத்தாமதம் ஆவதால் மாணவ, மாணவிகள் சாப் பிடாமலே பள்ளிக்கு நடந்து சென்று காலையில் நடைபெறு கின்ற கூட்டத்தில் மயங்கி விழுகின்ற நிலைமையும் அடிக்கடி நிகழ்கிறது. எனவே மாலை 5 மணிக்கும், காலை 8 மணியளவில் அரசு பேருந்தை சின்னாகவுண்டம்பட்டி, பொம்பட்டி, போளையம்பள்ளி, கோபிநாதம்பட்டி வழியாக தருமபுரி செல்லும் வகையில் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வழங்கினர். மேலும், பள்ளி மாணவர்களுக்கு சில நாட் களில் பொது தேர்வு நடைபெற உள்ளதால் அதைக்கருத் தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதையடுத்து தருமபுரி - மொரப்பூர் சாலை ஆர்.கோபிநாதம்பட்டி பகுதி யிலிருந்து மாரப்பநாயக்கன்பட்டி, பொம்மட்டி, போளையம் பள்ளி வழியாக புதனன்று பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்தை கிராமமக்கள் ஒன்று சேர்ந்து கரும்பு மற்றும் மாலை உள்ளிட்ட தோரண அலங்காரத்துடன் பட்டாசு வெடித்து வரவேற்றனர். மேலும், பேருந்து இயக்க உடனடி யாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் கி.சாந்திக்கு நன்றி தெரிவித்தனர்.