திருப்பூர், பிப்.21- திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள் ளிக்கு வந்த குழந்தைகளை ஆசிரியர்கள் பரிசு பொருட் கள் வழங்கி வரவேற்றனர். கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி கள் அனைத்தும் திறக்கப்பட்டன. நர்சரி பள்ளிகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. இருப்பினும் குறைந்த அளவிலான குழந்தைகள் மட்டுமே பள்ளிக்கு வந்து கொண்டிருந்த நிலை யில், திங்களன்று முதல் பெரும்பாலான குழந்தைகள் பள் ளிக்கு வந்தனர். இதனையடுத்து திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த குழந்தைகளை ஆசி ரியர்கள் பரிசு பொருட்கள் வழங்கி வரவேற்றனர்.