districts

img

களைகட்டும் பொங்கல் விழா

தருமபுரி, ஜன.14- தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பாக வெண்ணாம்பட்டியில், ஆயுதப்படை காவ லர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. காவலர் குடியிருப்பில் உள்ள குழந்தைக ளுக்கு கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற் காலி போட்டி, உறியடித்தல் போட்டி, லெமன் த ஸ்பூன், கைப்பந்து போட்டிகள் நடைபெற் றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ஸ்டீபன் ஜேசுபாதம் பரிசுகளை வழங்கி னார். இதில், காவல் கூடுதல் கண்காணிப்பா ளர் இளங்கோவன், பாலசுப்பிரமணியன், காவல் துணை கண்காணிப்பாளர் சத்திய மூர்த்தி மற்றும் காவல் ஆய்வாளர்கள் பங் கேற்றனர்.  நாமக்கல் குமாரபாளையம், ஸ்ரீ ராகவேந்திரா பாலி டெக்னிக் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா பப்ளிக் பள்ளி இணைந்து பாரம்பரிய முறைப் படி தைத்திருநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் திரு விழாவை கல்லூரி முதல்வர்  முனைவர் எஸ். விஜயகுமார் துவங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரி யர்கள் இணைந்து பொங்கல் வைத்து படை யல் இட்டு வழிபாடு செய்தனர். இந்த பொங் கல் விழாவில் மாணவ, மாணவிகள் மற்றும்  ஆசிரியர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து  பங்கேற்றனர். முன்னதாக பொங்கல் விழா வையொட்டி, கயிறு இழுத்தல், உறியடித்தல், மியூசிக்கல் சேர், லக்கி கார்னர் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.