districts

வேலைவாய்ப்புகளை குவிக்கும் சிறு, குறு தொழில்களை பாதுகாப்போம்

கடந்த வாரம் தமிழ்நாட்டில் நிஷான் கார் நிறுவனம் தனது  விரிவு படுத்தப்பட்ட ஆலையை திறந்தது. அந்த ஆலை ரூ.3330  கோடி மதிப்பில் விரிவுபடுத்தப் பட்டுள்ளதாக நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்த ஆலையில் புதிதாக 2000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தது. அதைப்போலவே ஓலா நிறுவனம் நான்கு சக்கர மின்  வாகன உற்பத்திக்கான ஆலை  அமைக்க தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில் புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில், கடந்த வாரம்  கையெழுத்திட்டது. ரூ.7614 கோடி  முதலீட்டில் அமைய உள்ள அந்த  ஆலை மூலம் 3111 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என  தமிழ்நாடு அரசு செய்தி குறிப்பு தெரிவித்தது.     மேற்கண்ட இரண்டு செய்திகள் மூலம், பெரும் கார்ப்ப ரேட் நிறுவனங்கள் ரூ.1.50 கோடி  முதலீடு செய்தால் ஒரு நபருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும்  என்பது தான். நாட்டில் மிக அதிக  வேலை வாய்ப்பு இன்றைக்கும் தந்து வரும் சிறு, குறு மற்றும்  நடுத்தர தொழில் நிறுவனங்களில்  ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய் தால் ஒருவருக்கு வேலைவாய்ப்பு  தந்து விடும் என்பதுதான். நாடு முழுவதும் 6.1 கோடி சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்கள் உள்ளன. சுமார் 11 கோடி  பேருக்கு அவை வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவை 30 சதவிகித பங்களிப்பைச் செய்கின்றன.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே மிக அதிக வேலை வாய்ப்பு தருபவையாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விளங்கு கின்றன. நமது நாட்டை பொறுத்த வரை விடுதலை பெற்ற காலத்தில்  இருந்தே தேச பொருளாதாரத் ்தில் முக்கிய பங்கினை MSME  நிறுவனங்கள் வகித்து வரு கின்றன. அத்தகைய முக்கியத் துவம் வாய்ந்த நிறுவனங்கள் தான் ஒன்றிய பாஜக அரசின்  கொள்கை முடிவால் தற்போது  கடும் நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றன. புள்ளி விவரங்களும் இதனையே தெரி விக்கின்றன. ஒன்றியத்தில் மோடி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்தே, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடும் நெருக்கடியை எதிர் கொள்கின்றன. முன்  யோசனையின்றி கொண்டுவரப் பட்ட பணமதிப்பிழப்பு நடவ டிக்கைகள் எம்எஸ்எம்இ துறைக்கு பெரும் அடியாய் இருந்தது. வார சம்பளம் கொடுத்து தொழில் நடத்தும் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு சம்பளம் தர கடும் சிரமப்பட்டனர். இதனை யடுத்து, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாக இருந்தது. பெரும்பான்மையான சிறு மற்றும் குறு நிறுவனங்கள், பெரு  நிறுவனங்கள் மற்றும் அரசு  பொதுத்துறை நிறுவனங்களிட மிருந்து உற்பத்தி ஆணை (ஜாப்  ஆர்டர்) பெற்று தொழில் நடத்தி  வருகின்றன. ஜிஎஸ்டி துவக்க காலத்தில் உற்பத்தி ஆணையின் மூலம் பெறப்படும் பணிகளுக்கு 18 சதவிகித வரியினை விதித்து நெருக்கடியை ஏற்படுத்தியது.  அதேநேரத்தில், கடந்த  எட்டு ஆண்டுகளில் பெருநிறுவ னங்களின் வராக்கடன் மட்டும்  சுமார் ரூபாய் 8 லட்சம் கோடி  அளவிற்கு தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. ஆனால் இந்திய வங்கிகளின் பரிவர்த்தனையில் (எம்எஸ்எம்இ) நிறுவனங் களுக்குத் தரும் கடன் அளவு வெறும் 4 சதவிகிதம்  மட்டுமே.  எம்எஸ்எம்இ துறையின் நெருக்கடியை உணர்ந்து ரிசர்வ் வங்கி 2018 ஆம் ஆண்டில் யூ.கே. சின்ஹா குழு என்று தனியாக ஒரு குழுவை அமைத்து பரிந்து ரைகள் கேட்டது.  நாட்டில் உள்ள  MSME க்களின் நிதி நிலைமையை  ஆய்வு செய்த யு.கே. சின்ஹா குழு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக கடும்  நிதி நெருக்கடி யில் உள்ளதாக  குறிப்பிப்பிட்டது அந்த நிலைமையிலிருந்து MSME  ஐ மீட்க பல்வேறு பரிந்துரை களை அளித்தது.

 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன  சட்டம் 2006 ல் திருத்தங்களை மேற்கொள்வது, தனியாக உள்நாட்டு சிறு, குறு  தொழில்களுக்கான நிதி தொகுப்பை உருவாக்குவது. உற் பத்தி ஆணைகள் குறித்த ஒப்பந் தங்களுக்கு சட்டபூர்வமாக அங் கீகாரம் (LEGAL STATUS) வழங்கு வது. வங்கிகள் மூலம் கடனுதவி பெறுவதை எளிதாக்குவது, தொழில் நுட்ப ஆய்வுகளுக்கு உதவுவது உள்ளிட்ட யூ.கே.  சின்ஹா குழுவின் பல்வேறு பரிந் துரைகள் எதுவுமே முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. CIA (Consorhitm of IndiaN Associations) கடந்த  ஜனவரியில் நடத்திய ஆய்வில் 76 சதவிகிதம் எம்எஸ்எம்இ நிறுவ னங்களில் லாபம் சம்பாதிக்க வில்லை. கடந்த 5 ஆண்டுகளாக தேக்க நிலையிலே உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர் களில் 87 சதவீதம் பேர் ஒன்றிய அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கை கடும் ஏமாற்றம் அளிப்ப தாக குறிப்பிட்டுள்ளனர்.

பெரு நிறுவனங்களில் லாபக்  குவிப்பு அதிகரித்துள்ள நிலை யில், சிறு, குறு மற்றும் நடுத்தர  தொழில் நடத்தவே தடுமாறுகின்ற நிலை ஒன்றும் இயல்பானது அல்ல, நவீன தாராளமய காலத் தில் நிதி மூலதனம் உலகம் முழுவ திலும் வலம் வருகின்றது. அதற்கு  பெரும் இலாபங்களை குவிக்கிக் கின்றன. பெரும் நிறுவனங்களே தேவை. எனவே தாராளமய பொருளாதாரக் கொள்கையை பின்பற்றும் அரசுகளும் அத்தகைய அதரவு நிலையே எடுக்கின்றன.  மூலப்பொருட்களின் விலை யை கட்டுப்படுத்தவும், எம்எஸ்எம்இ க்கு தொழில் நுட்ப  உதவிகள் வழங்கி ஊக்கப்படுத் தவும் ஒன்றிய அரசு தவறி யுள்ளது. பெரும் நிறுவனங்கள் குறித்த  புள்ளி விவரங்கள் வேறு வகை யான சமூகத் தோற்றத்தையே நமக்கு காட்டும். எனவே பொருளா தார ரீதியாகவும் சமூக ரீதியாக வும் வேலை வாய்ப்புகளை அள்ளித் தருகின்ற, சுயசார்புள்ள தேசத்தை கட்டமைக்க சிறு, குறு  மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாப்பதும் அவற்றை நெருக் கடியில் இருந்து மீட்பதும் அனை வரின் கடமையாகும். ஒன்றிய அரசின் செயல்பாடுகளை கொள்கை ரீதியாக உணர்ந்து கொண்டு எம்எஸ்எம்இ-யை பாதுகாக்க ஒன்றுபட்ட போராட் டத்துக்கு தொழில் முனைவோரும் முன் வர வேண்டும். அத்தகைய நல்ல நோக்கத்திற் காக இன்று (மார்ச்5) கோவையில்  நடைபெறும் தொழில் பாதுகாப்பு மாநாடு வெற்றியடைய ஒன்றி ணைந்து கரம் கோப்போம்.

 - கே.எஸ். கனகராஜ்  சிபிஎம் கோவை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்