districts

நல்ல முடிவு கிடைக்கும் வரை மின்கட்டணம் செலுத்த மாட்டோம்: விசைத்தறியாளர்கள்

கோவை, செப்.23- மின் கட்டண குறைப்பு குறித்து அமைச் சர் செந்தில்பாலாஜி  அளித்த நம்பிக்கை யின் அடிப்படையில் கோவை, திருப்பூர்  மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி யாளர்கள் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றனர். மேலும், நல்ல முடிவு கிடைக்கும் வரை மின் கட்டணத்தை செலுத்த மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறி விக்கப்பட்ட போதே பல்வேறு தரப்பினரும் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று கருத் துத் தெரிவித்திருந்தனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும்  விசைத்தறி உரிமையாளர்களும் கட்ட ணத்தை உயர்த்தக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர் சங்கத்தினர் நேரடியாக சென்னைக்குச் சென்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்தும் மின் கட்டண உயர்வை கைவிடுமாறு கேட்டுக் கொண்ட னர். எனினும், அரசு மின் கட்டணத்தை  உயர்த்தி அறிவித்தது. இதையடுத்து கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் மின் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி செப்.16ஆம் தேதி முதல் வேலை  நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினார். மேலும் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்துவதில்லை என்றும் ஏகமனதாக முடிவு செய்தனர்.

இந்நிலையில், மின் கட்டணம்  குறைப்பு தொடர்பாக விசைத்தறியாளர்கள் சங்க நிர் வாகிகள் மின்துறை அமைச்சரை சந்தித்து பேசியதில் சுமூக முடிவு எட்டப்பட்டதாக தெரி கிறது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டுக்கொண்டதற்கிணங்க  வேலை நிறுத் தத்தை திரும்பப் பெறுவதாக கோவை, திருப் பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து சூலூரை சேர்ந்த விசைத்தறி யாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், அமைச் சர் வி.செந்தில்பாலாஜி அளித்த நம்பிக்கை யின் அடிப்படையில் தற்போது வேலை நிறுத் தத்தை திரும்பப்பெற்றுள்ளோம். ஆனால், மின் கட்டண குறைப்பில் நல்ல முடிவு எட்டப் படும் வரை, கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறியாளர்கள் மின் கட்டணத்தை செலுத்தப் போவதில்லை என தெரிவித்தார்.