districts

img

உழைப்பவன் உரிமை காக்க சமரசமின்றி போராடுவோம்!

தருமபுரி, மே 1- உழைப்பவன் உரிமை காக்க சம ரசமின்றி போராடுவோம், சோசலிச சமூ கத்தை உருவாக்கிட பாட்டாளி வர்க் கத்தை அணி திரட்டுவோம் என்கிற உறு தியேற்போடு சிபிஎம், சிஐடியு சார்பில் மே தின நிகழ்வுகள் நடைபெற்றது.  தொழிலாளர்களின் உரிமையை பறித்து 4 சட்ட தொகுப்புகளாக மாற்றி யதை ஒன்றிய மோடி அரசு திரும்ப பெற வேண்டும். தமிழ்நாடு அரசு தொழிற் சாலைகள் திருத்த சட்டத்தை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங் களை பாதுகாக்க வேண்டும். இந்திய வளங்களை கார்ப்ரேட்டுகள் கபகளீரம் செய்ய ஒரு போதும் அனுமதியோம், தொழிலாளர், விவசாயிகளின் உரி மையை காக்க எவ்வித சமரசமும் இன்றி  போராடுவோம். மனித குல விடு தலைக்கு மார்க்சியமே தீர்வு என்பதை யும், சோசலிச சமூகத்தை உருவாக்க பாட்டாளி வர்க்கத்தை அணி திரட்ட முன் னைக்காட்டிலும், முனைப்போடு செயல் படுவோம் என்கிற முழக்கத்தோடு, மார்க் சிஸ்ட் கட்சி, இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் எழுச்சிகரமான மே தின நிகழ்வுகள் எழுச்சியோடு நடை பெற்றது. இதன்ஒருபகுதியாக, தருமபுரி மாவட் டத்தில், தொலைபேசி நிலையம் முன்பு  சிஐடியு சார்பில் நடைபெற்ற மேதின நிகழ்விற்கு சிஐடியு மாவட்ட தலைவர் சி.நாகராசன் தலைமை ஏற்றார். மாநி லக்குழு உறுப்பினர் சி.காலவதி வர வேற்றார். இதில், மாநிலச் செயலாளர் கோபி குமார் மாவட்ட செயலாளர் பி. ஜீவா ஆகியோர் சிறப்ரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர், பிஎஸ்என்எல் ஊழி யர் சங்க மாவட்ட செயலாளர் பி.கிருஷ் ணன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட இணைச்செயலாளர் ஏ.மாதேஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்ன தாக தருமபுரி பெரியார் மன்றத்திலி ருந்து துவங்கிய மேதின பேரணி கடை வீதிவழியாக பிஎஸ்என்எல் அலுவலகம் வந்தடைந்தது. முடிவில், மாவட்ட துணைத்தலைவர் ஜி.நாகராசன் நன்றி கூறினார்.

சிபிஎம் தருமபுரி

மே தினத்தை முன்னிட்டு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவதும் மே தின  கொடியேற்று விழா நடைபெற்றது. தருமபுரி, செங்கொடிபுரத்தில் நடை பெற்ற கொடியேற்று நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஆர்.ஜோதிபாசு தலைமை  வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.மாரிமுத்து கொடியேற்றி வைத் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸாமேரி உள்ளிட்டோர் பங் கேற்றனர். இதேபோன்று, தருமபுரி ஒன் றியம், பாப்பிரெட்பட்டி, அரூர், காரி மங்கலம், பாலக்கோடு உள்ளிட்ட மாவட் டத்தின் அனைத்து ஒன்றிய, தாலுகா,  நகர பகுதிகளில் மேதின விழா எழுச்சி யோடு நடைபெற்றது. இந்நிகழ்வுக ளில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்து, சோ.அருச் சுணன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள், நகர, ஒன்றிய செயலா ளர்கள் பங்கேற்றனர். இதேபோன்று மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் நடைபெற்ற மே தின  நிகழ்ச்சிகளில் சிபிஎம் மாவட்ட செயலா ளர் வி.ஏ.பாஸ்கரன் உள்ளிட்ட தலைவர் கள் பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மே தின நிகழ்வில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுச்சாமி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.அசோகன், மாவட்ட தலைவர் கே.மோகன், சிபிஎம் மூத்த தலைவர் எம்.ஜி.ராஜகோபால், மாதர் சங்க மாவட்ட தலைவர் ராணி, விசைத் தறி தொழிலாளர் சங்க ஒன்றிய செயலா ளர் முத்துக்குமார் மற்றும் சிபிஎம், சிஐ டியு தலைவர்கள் பங்கேற்றனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், உதகையில், 137  ஆவது மே தின பேரணி, பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. காபி ஹவுஸ் பகுதியில் இருந்து துவங்கிய பேரணி, மார்க்கெட் வழியாக பேருந்து நிலையத்தின் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிஐடியு, ஏஐடியுசி தொழிற் சங்கங்கள் இணைந்து நடத்திய நிகழ் விற்கு சிஐடியு மாவட்ட தலைவர் எல். சங்கரலிங்கம், ஏஐடியுசி மாவட்ட செய லாளர் கே.முர்த்தி ஆகியோர் தலைமை ஏற்றனர். பேரணியை மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினரும், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளருமான ஏ. ராதிகா, ஏஐடியுசி மாநில நிர்வாகி பி. போஜராஜன் ஆகியோர் துவக்கி வைத் தனர். இதில், சிஐடியு மாவட்ட செயலா ளர் சி.வினோத், மாதர் சங்க மாவட்ட  செயலாளர் ஏ.ஆதிரா, ஏஐடியுசி போக்கு வரத்து மாவட்ட தலைவர் இப்ராகிம் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்றனர். முடிவில், சிஐடியு மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் நன்றி கூறினார். 

ஈரோடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கோமதி தலைமையில் நடைபெற்ற மே தின விழா கொடியினை, மூத்த தோழர் எம்.அண்ணாதுரை கொடியேற்றி வைத் தார். இதேபோன்று, நகரக்குழு அலுவ லகம், ஈரோடு தாலுகா குழு  அலுவலகம், பவானி தாலுகா, அந்தியூர் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம், கொடுமுடி-மொடக் குறிச்சி தாலுக்காவில் கட்சி அலுவல கம் மற்றும் கோபி, சத்தியமங்கலம் மற் றும் மலை கமிட்டி, கட்சி கிளைகள், ஆலை, நிறுவன வாயில்கள் என பல் வேறு பகுதிகளில் மேதின விழா எழுச்சி யோடு நடைபெற்றது. இதில், மார்க் சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செய லாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி உள் ளிட்ட கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, தாலுகா  செயலாளர்கள், சிஐடியு நிர்வாகிகள் திர ளானோர் பங்கேற்றனர். பவானி சாகர் கமிட்டியில் நடைபெற்ற மேதின நிகழ் வில், சிபிஎம் மூத்த தோழர் கே.துரை ரா‌ஜ்‌‌, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் சங்க அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ப.மாரிமுத்து உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

137 ஆவது மே தின விழா சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங் களிலும் செங்கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சேலம் சிபிஎம் மாவட்ட குழு அலுவலகமான சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில் அலு வலக செயலாளர் பி. சந்திரன் தலைமை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மே தின செங்கொடியை மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி மே  தின உரையாற்றினார். இதில் பலர் பங் கேற்றனர். இதேபோன்று மாவட்டத்தில் மே தின கொடியேற்று விழா நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எழுச்சியோடு நடைபெற்றது. இந்நிகழ்வுகளில், கட்சி யின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பி.ராமமூர்த்தி, எம். குணசேகரன், ஜி.கணபதி, ஞானசௌந் தரி, எஸ்.கே.சேகர் உள்ளிட்ட தலைவர் கள் பங்கேற்றனர். 

சிஐடியு சேலம்

சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சேலம் மாவட்டத்தில் 200க்கும் மேற் பட்ட இடங்களில் செங்கொடி ஏற்றி கொண் டாடப்பட்டது. ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகி எஸ்.கே. தியாகராஜன் தலை மையிலும், மேட்டூர் பகுதியில் மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ மற்றும் சி.  கருப்பண்ணன் தலைமையிலும், மாந கர பகுதிகளில் மாவட்ட செயலாளர் ஏ. கோவிந்தன், சுமைப்பணி சங்க மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடாபதி தலைமை யிலும் கொடியேற்று நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

கோவை 

தொழிலாளர் வர்க்கத்தின் கேந்திர மையமான கோவை மாவட்டத்தில், மே  தின விழா சிஐடியு மற்றும் மார்க்சிஸ்ட்  கட்சியின் எழுச்சியோடு கொண்டாடப்பட் டது. மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்து கிளைகளிலும் செங்கொடி ஏற்றி மே தின உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதேபோன்று சிஐடியு சார்பில், பஞ் சாலைகள், தொழிற்சாலைகள், ஆட்டோ ஸ்டேன்டுகள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து, பிஎஸ்என்எல், வங்கி, எல்ஐசி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்ட இடங்களில் மேதின செங்கொடி  ஏற்றி எழுச்சியோடு கொண்டாடப்பட் டது.  கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மேதின நிகழ்வுகளில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கட் சியின் மாவட்ட செயலாளர் சி.பத்ம நாபன், சிஐடியு மாவட்ட தலைவர் கே. மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி உள்ளிட்ட நிர்வாகிகளும், மார்க்சிஸ்ட்  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், நகர, ஒன்றிய, தாலுகா செய லாளர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்று மே தின உரையாற்றினர்.

திருப்பூர்

திருப்பூரில் 137 ஆவது மே தின விழா எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. திங்களன்று திருப்பூரில் கனமழை பெய்த நிலையில் சிஐடியு, ஏஐடியுசி இணைந்து நடத்த திட்டமிட்டு இருந்த மே தின பேரணி கைவிடப்பட்டு அரிசி கடை வீதியில் மே தின சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அவிநாசி சாலையி லுள்ள சிஐடியு தலைமை அலுவலக மான தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பாக மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் செந்தாண்டர்கள் அணிவகுக்க, சீருடை அணிந்த குழந் தைகள் சிகப்பு பலூன்களுடன் நூற்றுக் கணக்கில் திரண்டு இருக்க அங்கிருந்த வர்களின் விண்ணதிரும் முழக்கத்திற்கு  இடையே மே தின கொடியேற்றப்பட் டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் கொடியை மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஏற்றி வைத்தார்.  சிஐடியு செங்கொடியை, சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.கண் ணன் ஏற்றி வைத்தார். இதில் சிஐடியு திருப்பூர் மாவட்ட தலைவர் சி.மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் கே.உன்னி  கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் வடக்கு மாநகர செயலாளர் பி.ஆர்.கணேசன், வடக்கு ஒன்றிய செய லாளர் ஆர்.காளியப்பன் உட்பட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு  ஊழியர்கள் பெருந்திரளாக பங்கேற்ற னர்.

தீக்கதிர்

தீக்கதிர் கோவை பதிப்பு அலுவ லகம் முன்பு நடைபெற்ற மே தின  நிகழ்ச்சிக்கு கட்சி நிர்வாக செயலாளர் நெல்சன் பாபு தலைமை வகித்தார். பொது  மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம் செங் கொடியை ஏற்றி வைத்து. மே தின சிறப்புரையாற்றினார். முடிவில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.கண்ணன்  நிறைவுரையாற்றினார். இதில் தீக்கதிர் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.