திருப்பூர், அக்.5- சிறு தொழில்களைக் காப்பாற்ற, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை அமல்படுத்தி வரும் மோடி அரசை அகற்ற வேண்டும் என்று சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன் கூறினார். பனியன் தொழிலை மீட்போம் தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாது காப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் திறந்தவெளி கருத்தரங்கம் வியாழனன்று ராயபுரத்தில் எல்பிஎப் பனியன் சங்கப் பொதுச் செயலாளர் க.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமா றன் பேசுகையில், இந்தியா முழுவ தும் தற்போது தொழில் பாதுகாப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் இருந்த திருப்பூர் மாவட் டம் இப்போது நலிவைச் சந்தித்து வரு கிறது. பங்களாதேசில் இருந்து ஆடை இறக்குமதி வரியை குறைத்த வுடன் பெரும்பாலான ஆடைகள் அங்கிருந்து வருகிறது. இன்று மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடும் உற்பத்தியாளர் களின் கோரிக்கை நியாயமானது தான். அவர்கள் ஒருநாள் உண்ணாவி ரதம் இருந்ததையடுத்து தமிழக அரசு சில கோரிக்கைகளை தளர்த்தி உள் ளது. ஆனால் இதே முதலாளிகள் தான் 2014ஆம் ஆண்டு மோடி ஆட் சிக்கு வந்தால் திருப்பூர் சொர்க்க மாக மாறும் என்று கூறி அதற்கான வேலைகளை செய்தனர். அந்த விசு வாசத்தில்தான் இன்றும் மோடிக்கு எதிராக பேசாமல் உள்ளார்களோ என்று தோன்றுகிறது. மோடியும் அன்று திருப்பூரின் வர்த்தகத்தை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்துவேன் என்று வாய்கூசாமல் பொய் பேசினார். இந்திய இளைஞர் களுக்கு அதிகமான வேலை வாய்ப்பை வழங்கி வந்த திருப்பூர் இப்போது அழியும் தறுவாயில் உள் ளது. முன்பெல்லாம் சுற்றி சுற்றி டாக்சி வைத்திருந்த ஓனர்கள் இப்போது ஓலா, ஊபர் போன்ற தனியார் கார்ப ரேட் நிறுவனங்களின்கீழ் வேலை செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட் டுள்ளார்கள். மோடி அரசு புதிய ஸ்மார்ட் மின் மீட்டர்களை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். அதை ஒவ் வொரு வீடுகளுக்கும் பொருத்த தனி யார் நிறுவனங்களுக்கு ரூ.35 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் அளித்துள்ளார் கள். அந்த மீட்டார்களின் காலம் வெறும் ஐந்து ஆண்டுகள் தான். 5 ஆண்டுக்கு ஒருமுறை ரூ.35 லட்சம் கோடி கொள்ளை அடிக்க திட்ட மிட்டுள்ளார்கள். சிறுசிறு தொழில்களை அழித்து வருகிறார்கள். எல்லா வகையிலும் கார்பரேட்க்கு ஆதரவாக சட்ட திருத் தங்கள் கொண்டுவந்து தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை கேள் விக்குறியாக்கி வரும் மோடி அரசை அகற்ற வேண்டும், என்றார். இதில் ஏஐடியுசி அகில இந்திய துணைத் தலைவர் கே.சுப்பராயன் எம்.பி., பேசும்போது, ஒன்றிய அர சின் கொள்கைகளால் திருப்பூர் பனி யன் தொழில் கடுமையாக பாதிக்கப் பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, பாஜக ஆட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்றார். இக்கருத்தரங்கில் எச்எம்எஸ் மாநில செயல்தலைவர் எம்.சுப்பிரம ணியபிள்ளை, ஐஎன்டியுசி மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.சிவசாமி, எம். எல்.எப் மாவட்டச்செயலாளர் மு.சம் பத் ஆகியோர் கருத்துரையாற்றினர். இந்த கூட்டத்தில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வ ராஜ், அனைத்து தொழிற்சங்க நிர்வா கிகள் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.